'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
பிரபல பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சன், ஷாருக்கான், அஜய் தேவ்கான், ரன்வீர் சிங், அக்ஷய் குமார் ஆகியோர் புகையிலை மற்றும் பான்மசாலா விளம்பரங்களில் நடித்திருக்கிறார்கள். கடும் எதிர்ப்பு கிளம்பவே அக்ஷய்குமார் மட்டும் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டதோடு, தான் ஒப்பந்தம் செய்திருந்த கம்பெனிகளுடனான ஒப்பந்தத்தையும் ரத்து செய்தார்.
இந்த நிலையில மும்பையை சேர்ந்த தமன்னா ஹாசீம் என்பவர் மும்பை உயர்நீதி மன்றத்தில் நடிகர்கள் அமிதாப்பச்சன், ஷாருக்கான், அஜய் தேவ்கன் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இளைஞர்களை தீயவழியில் ஈபட வைக்கும் போதை புகையிலை விளம்பரத்தில் நடித்துள்ள இவர்கள் சமுதாயத்துக்கு கேடான செயல்களில ஈடுபட்டுள்ளனர். இவர்கள் சொல்வதை நம்பும் ரசிகர்களை இவர்கள் தவறான வழியில் நடத்திச் செல்கிறார்கள். எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று வழக்கின் மனுவில் தமன்னா ஹாசிம் தெரிவித்திருக்கிறார்.