ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ராஜ்யசபா எம்.பி.யாக நியமனம் | ராஜ்யசபா எம்.பி.யாக இளையராஜா நியமனம் : பிரதமர், ரஜினி, கமல் வாழ்த்து | காமெடி கதையில் நடிக்கும் அனுஷ்கா | பாலியல் புகார் நடிகரின் ஜாமீனை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு | கடுவாவுக்கு யு/ஏ சான்றிதழ் ; சிக்கலின்றி வெளியாகிறது | மாமன்னன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் வடிவேலு | அடேங்கப்பா... 800 தியேட்டர்களில் வெளியாகும் 'தி லெஜண்ட்' | மீண்டும் பட தயாரிப்பில் களமிறங்கும் தனுஷ் | உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் “மூத்தகுடி” | சிரஞ்சீவி பெயரில் தவறு செய்த 'காட்பாதர்' குழு |
கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாடல் அழகியும், நடிகையுமான சஹான தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த ஈரம் காயும் முன்பே மலையாள படங்களில் நடித்து வந்த திருநங்கை நடிகை ஷெரின் ஷெலின் மேத்யூ மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். 26 வயதான ஷெலின் ஷெரின் மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். ஏராளமான படங்களில் திருநங்கையாகவும், நாயகன், நாயகியின் தோழியாகவும் நடித்துள்ளார். பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.
கொச்சி சக்கராம்பரம்பு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாக அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் வீட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அப்போது ஷெரின் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை கண்டுபிடித்தனர். அவரது உடலை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஷெரின் தற்கொலை செய்து கொண்டாரா? கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.