வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் | தனுஷ் மருமகன் நடிக்கும் அடுத்த படம்: தாத்தா கஸ்தூரிராஜா தொடங்கி வைத்தார் | சித்திரம் பேசுதடி ஹீரோயினுக்கு சாருனு பெயர் வைத்தது ஏன்? மிஷ்கின் | மீண்டும் துப்பாக்கி பயிற்சியில் இறங்கிய அஜித் | ஆபாச படத்தைக் காட்டி 2 கோடி கேட்டு மிரட்டிய நடிகை |

கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாடல் அழகியும், நடிகையுமான சஹான தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த ஈரம் காயும் முன்பே மலையாள படங்களில் நடித்து வந்த திருநங்கை நடிகை ஷெரின் ஷெலின் மேத்யூ மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். 26 வயதான ஷெலின் ஷெரின் மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். ஏராளமான படங்களில் திருநங்கையாகவும், நாயகன், நாயகியின் தோழியாகவும் நடித்துள்ளார். பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.
கொச்சி சக்கராம்பரம்பு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாக அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் வீட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அப்போது ஷெரின் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை கண்டுபிடித்தனர். அவரது உடலை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஷெரின் தற்கொலை செய்து கொண்டாரா? கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.