ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் |
பெங்களூருவை சேர்ந்த கன்னட நடிகை சேத்தனா ராஜ் என்பவர் சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர். 21 வயதான இவர் தனது உடல் எடை குறைப்புக்காக பெங்களூரில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனை ஒன்றில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்வதற்காக சேர்ந்தார். கடந்த மே 16-ம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் அதன் பிறகு அவரது உடல்நிலையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. இதைத்தொடர்ந்து அவருக்கு பல்வேறு விதமான சிகிச்சைகள் அளித்தும் எந்த பலனும் ஏற்படவில்லை
மேலும் அந்த மருத்துவமனையில் ஐசியு வசதி இல்லாததால் அருகில் இருந்த இன்னொரு பெரிய மருத்துவமனைக்கு அவரை கொண்டுசென்ற மருத்துவர்கள், அங்கிருந்த மருத்துவர்களை மிரட்டி அவருக்கு மேல் சிகிச்சை அளிக்குமாறு கூறி உள்ளனர். ஆனால் அங்கே கொண்டுவரப்பட்ட போதே அவர் உயிர் பிரிந்து இருந்தது என்பதை அறிந்த மருத்துவர்கள் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இப்படி ஒரு அறுவை சிகிச்சை செய்து கொள்ளப்போவதாக தனது பெற்றோரிடம் கூட நடிகை சேத்தனா ராஜ் தகவல் தெரிவிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அவரது பெற்றோர் மருத்துவமனையின் அஜாக்கிரதையால் தான் தனது மகளது உயிர் போய் விட்டது என்று குற்றம் சுமத்தி உள்ளார்கள். பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்போய் நடிகை உயிரிழந்த நிகழ்வு கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.