ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த வருடம் ஜனவரியில் தெலுங்கில் நடிகர் ரவிதேஜா நடித்த கிராக் என்கிற படம் வெளியானது. கொரோனா முதல் அலை முடிந்து கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த சமயத்தில் வெளியான இந்தப்படம் ரசிகர்களை கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு வரவழைத்தது. அதற்கு முன்னதாக தொடர்ந்து தோல்விகளை தழுவிய ரவிதேஜாவுக்கு இந்தப்படம் மாபெரும் வெற்றியை கொடுத்து தலைநிமிர செய்தது. இந்தப் படத்தை இயக்குனர் கோபிசந்த் மாலினி இயக்கியிருந்தார்.
படம் வெளியாகி ஒரு வருடம் கடந்து விட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் கதையை 2015-ல் நான் எழுதிய நாவல் ஒன்றில் இருந்து திருடி படமாக எடுத்துள்ளார்கள் என்று சிவசுப்பிரமணிய மூர்த்தி என்பவர் படத்தின் தயாரிப்பாளர் மீது ஜூபிலி ஹில்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். படம் வெளியாகி ஒரு வருடம் ஆகிவிட்டதால் இதன் மீது என்ன நடவடிக்கை என்பது குறித்து ஆலோசனை செய்து வருவதாக சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கதை திருட்டு குறித்து சினிமா துறையில் உள்ள தயாரிப்பாளர் சங்கம், எழுத்தாளர் சங்கம் ஆகியவற்றில் புகார் கொடுக்காமல், நீதிமன்றத்திலும் வழக்கு தொடராமல் இப்படி காவல் நிலையத்தில் ஒருவர் புகார் அளித்துள்ளது தெலுங்கு திரையுலகில் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது