நாகார்ஜுனா 100வது படத்தில் இணைந்த நடிகை சுஷ்மிதா பட்! | ‛வா வாத்தியார்' டைட்டிலின் பின்னணி ; ஆனந்தராஜ் சொன்ன தகவல் | தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை | கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது! | சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா! | 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் |

மலையாள திரையுலகில் குணச்சித்திர நடிகராக அறிமுகமாகி கடந்த சில வருடங்களில் கதையின் நாயகனாக நடிக்கும் அளவிற்கு உயர்ந்தவர் நடிகர் ஜோஜூ ஜார்ஜ். கடந்த 4 வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் இவர் கதையின் நாயகனாக நடித்து வெளியான ஜோசப் என்கிற படம் ஹிட்டாகி இவருக்கு மிகப் பெரிய நட்சத்திர அந்தஸ்தை கொடுத்தது. தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்திலும் இவர் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் இவர் கேரளாவில் வாகமன் பகுதியில் முறையான அனுமதியின்றி அனுமதி மறுக்கப்பட்ட விவசாய நிலத்தில் தனது ஜீப்பில் ரேஸில் ஈடுபட்டார் என்று அந்த பகுதியை சேர்ந்த மாணவர் சங்கத்தினர் போலீசில் அவர் மீது புகார் அளித்தனர். மேலும் ஜோஜு ஜார்ஜ் ரேஸில் ஈடுபடும் வீடியோ ஒன்றும் சோசியல் மீடியாவில் வெளியானது.
இதையடுத்து வண்டிப்பெரியார் போக்குவரத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரது வாகன உரிமம் உள்ளிட்ட டாக்குமென்ட்களை எடுத்துக்கொண்டு நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். கடந்த வருடம் இதே போன்று நடிகர் துல்கர் சல்மான் மற்றும் பிரித்திவிராஜ் ஆகிய இருவரும் ரேஸில் ஈடுபட்டதாக ஒரு வீடியோ வெளியானாலும் அது அவர்கள் தான் என உறுதியாக தெரியாததால் அவர்கள் வழக்கில் இருந்து தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.