பாலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்த நயன்தாரா, ராஷ்மிகா | 5 மொழிகளில் சொந்தக் குரலில் பேசிய பிருத்விராஜ் | த்ரிஷா தானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் : மன்சூர் அலிகானுக்கு கோர்ட் கேள்வி | இயக்குனராக தனுஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது | தெலுங்கில் மூத்த நடிகர்களுக்கு ஜோடியாகும் த்ரிஷா | தனுஷ் குரலில் நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் இரண்டாவது பாடல்! | சேதுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விக்ரம் | இரண்டு விஜய் சேதுபதி படங்களில் முக்கிய தோற்றத்தில் பப்லு பிரித்விராஜ் | காமெடி படங்கள் தான் பிடிக்கும் : பார்வதி சொல்லுகிறார் | ஆன்லைன் மோசடியை அம்பலப்படுத்தும் 'இ மெயில்' |
மலையாள திரையுலகில் குணச்சித்திர நடிகராக அறிமுகமாகி கடந்த சில வருடங்களில் கதையின் நாயகனாக நடிக்கும் அளவிற்கு உயர்ந்தவர் நடிகர் ஜோஜூ ஜார்ஜ். கடந்த 4 வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் இவர் கதையின் நாயகனாக நடித்து வெளியான ஜோசப் என்கிற படம் ஹிட்டாகி இவருக்கு மிகப் பெரிய நட்சத்திர அந்தஸ்தை கொடுத்தது. தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்திலும் இவர் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் இவர் கேரளாவில் வாகமன் பகுதியில் முறையான அனுமதியின்றி அனுமதி மறுக்கப்பட்ட விவசாய நிலத்தில் தனது ஜீப்பில் ரேஸில் ஈடுபட்டார் என்று அந்த பகுதியை சேர்ந்த மாணவர் சங்கத்தினர் போலீசில் அவர் மீது புகார் அளித்தனர். மேலும் ஜோஜு ஜார்ஜ் ரேஸில் ஈடுபடும் வீடியோ ஒன்றும் சோசியல் மீடியாவில் வெளியானது.
இதையடுத்து வண்டிப்பெரியார் போக்குவரத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரது வாகன உரிமம் உள்ளிட்ட டாக்குமென்ட்களை எடுத்துக்கொண்டு நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். கடந்த வருடம் இதே போன்று நடிகர் துல்கர் சல்மான் மற்றும் பிரித்திவிராஜ் ஆகிய இருவரும் ரேஸில் ஈடுபட்டதாக ஒரு வீடியோ வெளியானாலும் அது அவர்கள் தான் என உறுதியாக தெரியாததால் அவர்கள் வழக்கில் இருந்து தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.