கதையே வாகை சூடும் : 'வீரமே வாகை சூடும்' டிம்பிள் ஹயாதி | இலங்கை மியூசியத்தில் என் படம்: போண்டா மணி நெகிழ்ச்சி | நடிகை துன்புறுத்தல் வழக்கில் மீண்டும் ஜாமினுக்கு விண்ணப்பித்த பல்சர் சுனி | சன்னி லியோன் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்திற்கு அருகே குண்டு வெடித்ததால் பரபரப்பு | 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் வாணி ஜெயராம் உடல் தகனம் | ஏஜென்ட் ரிலீஸ் தேதி அறிவிப்பு ; அகிலுக்கு வாழ்த்து சொன்ன சமந்தா | சர்ச்சையில் சிக்கிய விஜய்யின் 'லியோ' படத்தின் புரோமோ வீடியோ | நடிகர்களை தலைவர் என்று அழைப்பது நெருடலாக உள்ளது - வெற்றிமாறன் கருத்து | உச்சக்கட்ட மகிழ்ச்சியில் வரலட்சுமி சரத்குமார் | மனவருத்தம் நீங்காமலே மறைந்துவிட்டார் வாணி ஜெயராம் ; இசையமைப்பாளர் கோபி சுந்தர் வருத்தம் |
மலையாள திரையுலகில் குணச்சித்திர நடிகராக அறிமுகமாகி கடந்த சில வருடங்களில் கதையின் நாயகனாக நடிக்கும் அளவிற்கு உயர்ந்தவர் நடிகர் ஜோஜூ ஜார்ஜ். கடந்த 4 வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் இவர் கதையின் நாயகனாக நடித்து வெளியான ஜோசப் என்கிற படம் ஹிட்டாகி இவருக்கு மிகப் பெரிய நட்சத்திர அந்தஸ்தை கொடுத்தது. தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்திலும் இவர் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் இவர் கேரளாவில் வாகமன் பகுதியில் முறையான அனுமதியின்றி அனுமதி மறுக்கப்பட்ட விவசாய நிலத்தில் தனது ஜீப்பில் ரேஸில் ஈடுபட்டார் என்று அந்த பகுதியை சேர்ந்த மாணவர் சங்கத்தினர் போலீசில் அவர் மீது புகார் அளித்தனர். மேலும் ஜோஜு ஜார்ஜ் ரேஸில் ஈடுபடும் வீடியோ ஒன்றும் சோசியல் மீடியாவில் வெளியானது.
இதையடுத்து வண்டிப்பெரியார் போக்குவரத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரது வாகன உரிமம் உள்ளிட்ட டாக்குமென்ட்களை எடுத்துக்கொண்டு நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். கடந்த வருடம் இதே போன்று நடிகர் துல்கர் சல்மான் மற்றும் பிரித்திவிராஜ் ஆகிய இருவரும் ரேஸில் ஈடுபட்டதாக ஒரு வீடியோ வெளியானாலும் அது அவர்கள் தான் என உறுதியாக தெரியாததால் அவர்கள் வழக்கில் இருந்து தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.