அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் | மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ் | லெவன் பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | பாடலால் ஜேசன் சஞ்சய் படம் பாதிப்பா | ஆக் ஷன் ரோல் என சொன்னதும் அப்பா சொன்ன வார்த்தை : கல்யாணி பிரியதர்ஷன் | ‛வட சென்னை' பின்னணியில் வெற்றிமாறன் - சிம்பு படம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தாணு | அக்டோபர் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‛வார்-2' | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி? | பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தமா? |
தெலுங்கு இயக்குனரான வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், விஜய், ராஷ்மிகா மந்தானா மற்றும் பலர் நடிக்கும் விஜய்யின் 66வது படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இப்படத்தில் தமிழ் நடிகர்களான சரத்குமார், பிரபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர பிரகாஷ் ராஜ், ஜெயசுதாவும் நடிக்கின்றனர். நேற்று இப்படத்தில் நடிக்கும் மற்ற சில நடிகர்களைப் பற்றிய அப்டேட்களைத் தொடர்ச்சியாகக் கொடுத்தது படக்குழு.
நகைச்சுவை நடிகர் யோகிபாபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், தமிழ் நடிகை சங்கீதா, பிக் பாஸ் புகழ் சம்யுக்தா ஆகியோரும் இப்படத்தில் இணைவதாக நேற்று அறிவித்தனர். நேற்று முதல் இப்படத்தின் படப்பிடிப்பில் தமிழ் நடிகர் ஷாம் கலந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது ஒரு குடும்பக் கதையாக உருவாகிறது. படத்தைத் தமிழில் தயாரித்தாலும் எப்படியும் தெலுங்கிலும் டப்பிங் செய்து வெளியிடுவார்கள். எனவே, இரு மொழிகளிலும் அறிந்த நடிகர்கள், நடிகைகளை படத்தில் நடிக்க வைப்பதாகத் தெரிகிறது.