எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
தெலுங்குத் திரையுலகத்தில் இருந்து அடுத்தடுத்து பான்-இந்தியா நடிகர்கள் உருவாகி உள்ளார்கள். பிரபாஸ், அல்லு அர்ஜுன், ஜுனியர் என்டிஆர், ராம்சரண் ஆகியோர் இப்போது இந்திய அளவிலும், ஹிந்தி ரசிகர்களிடமும் பிரபலமாகிவிட்டார்கள். கன்னட நடிகரான யஷ் கூட அவர்கள் வரிசையில் சேர்ந்துவிட்டார்.
ஆனால், தெலுங்கின் டாப் நடிகர்களில் ஒருவரான மகேஷ் பாபு தனக்கு அந்த ஆசையில்லை என தெரிவித்துள்ளார். அவர் நடித்து மே 13ம் தேதி வெளிவர உள்ள 'சர்க்காரு வாரி பாட்டா' படத்தின் பிரமோஷன் நிகழ்வின் போது அவர் பேசுகையில், “தெலுங்கில் மட்டுமே எப்போதும் நடிக்க ஆசை. அதை இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பார்த்து ரசிக்கட்டும். இப்போது அது நடக்கும்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
பாலிவுட்டில் எனக்கு வாய்ப்பளிக்க மாட்டார்கள். அதனால், நான் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. இங்கு தெலுங்கில் எனக்குக் கிடைக்கும் அன்பு, நட்சத்திர அந்தஸ்து ஆகியவை நிறைவாக கிடைக்கும் போது வேறு திரையுலகத்திற்கு செல்ல எண்ணவில்லை. இங்கு படத்தில் நடித்து அது பெரிய அளவில் பேசப்படட்டும். நான் நினைத்தது இப்போது நிஜத்தில் நடந்து கொண்டிருக்கிறது,” என்று தெரிவித்துள்ளார்.
மகேஷ் பாபு அப்படி பேசியிருந்தாலும் அடுத்து ராஜமௌலியின் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ள படம் பான்--இந்தியா படமாகத்தான் உருவாக உள்ளது.