கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது | எனக்கு தடை விதிப்பவர்களிடம் ஏன் என்று கேளுங்கள்: ராஷ்மிகா | அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள பூமி பட்னேகர் | பிளாஷ்பேக் : அமிதாப்பச்சன் பட ரீமேக்கில் ஆர்வம் காட்டிய ரஜினி | பழம்பெரும் பாடகி, நடிகை பாலசரஸ்வதி தேவி காலமானார் | நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு |
தெலுங்கு திரையுலகில் இருந்து புஷ்பா, அடுத்து ஆர்ஆர்ஆர், இந்தப்பக்கம் கன்னடத்திலிருந்து கேஜிஎப்-2 என பெரிய படங்கள் எல்லாம் வெளியாகி வசூல் ரீதியாக வெற்றியை பெற்றன. இந்த சூழலில்தான் மிக பெரிய பட்ஜெட்டில் சிரஞ்சீவி நடிப்பில் உருவான ஆச்சார்யா திரைப்படமும் அந்த படங்களுக்கான வரவேற்பையும் வசூலையும் பெற்றுவிடலாம் என்கிற கணக்கில் சமீபத்தில் ரிலீசானது. ஆனால் படம் வெளியான முதல் நாளே ரிசல்ட் நெகட்டிவாக வர ஆரம்பித்ததால் தோல்விப்பட்டியலில் இடம்பிடித்து விட்டது ஆச்சார்யா.
கொரட்டலா சிவா இயக்கிய இந்த படத்தை சிரஞ்சீவியின் மகன் நடிகர் ராம்சரண் தான் தயாரித்து இருந்தார். இந்த நிலையில் இந்த படத்தினால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யுமாறு வினியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து சிரஞ்சீவி இடம் கோரிக்கை வைக்க முடிவு செய்துள்ளனர். இதில் ராஜகோபால் பஜாஜ் என்கிற விநியோகஸ்தர் மற்றவர்களுக்கு முன்னதாக முந்திக்கொண்டு சிரஞ்சீவிக்கு ஒரு கடிதமே எழுதிவிட்டார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே முழு தொகையையும் கொடுத்து வாங்கியதாகவும், தற்போது கிட்டத்தட்ட 75% இந்த படத்தால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் இந்த இழப்பை ஈடு செய்யுமாறு சிரஞ்சீவியிடம் கோரிக்கையும் வைத்துள்ளார். சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ள இந்த கடிதம் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.