அதிக சம்பளம் என்றால் வில்லனாக நடிப்பாரா கமல்ஹாசன்? | ஆர்ஆர்ஆர் பட காட்சிகளை இயக்க பாலிவுட் இயக்குனரை அழைத்த ராம்சரண் | தம்பியின் அறிமுக படத்திற்கு எதிராக களம் இறங்கிய ராணா | பிரேமம் வாய்ப்பு கைநழுவிப்போய் பஹத் பாசில் படம் மூலம் வெளிச்சத்திற்கு வந்த அஞ்சனா ஜெயபிரகாஷ் | பஸ் விபத்தில் சிக்கிய புஷ்பா 2 படக்குழு | மரகதமணியின் பாராட்டு மழையில் நனைந்த ஜஸ்டின் பிரபாகரன் | சமந்தா வெளியிட்ட தல கீழ் புகைப்படத்துக்கு 9 லட்சத்துக்கு அதிகமான லைக்குகள் | ‛ரெஜினா' பட விழா : மேடையில் பாட்டுபாடி, நடனமாடி அசத்திய சுனைனா | மார்கழி திங்கள் படப்பிடிப்பில் விபத்து: தப்பிய லைட்மேன்! | அனுஷ்கா படத்திற்காக தனுஷ் பாடிய பாடல் வெளியீடு |
சிரஞ்சீவி நடித்துள்ள ஆச்சார்யா திரைப்படம் தற்போது தியேட்டர்களில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து அவர் நடிக்கும் காட்பாதர், போலோ சங்கர் மற்றும் இன்னும் பெயரிடப்படாத இரண்டு படங்களிலும் சிரஞ்சீவி நடிக்கிறார். இந்தநிலையில் சிரஞ்சீவி நடிப்பில் புதிய படம் ஒன்றை தயாரிக்க இருப்பதாக ஒரு தகவலை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை ராதிகா
இதுபற்றி அவர் கூறும்போது, “எங்களுடைய ராடன் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படம் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டதற்காக அன்பு சிரஞ்சீவிக்கு நன்றி. மாஸ் மன்னனான சிரஞ்சீவியுடன் இணைந்து பிளாக்பஸ்டர் படத்தை உருவாக்குவதற்கு காத்திருக்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் சரத்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பார் என்றும் தெரிகிறது
எண்பது, தொண்ணூறுகளில் சிரஞ்சீவியுடன் இணைந்து பல தெலுங்கு படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் ராதிகா. அதுமட்டுமல்ல 90களின் நட்சத்திர சங்கமத்தில் அடிக்கடி சந்திப்பு நிகழ்த்தியும் ராதிகா தங்களது நட்பை பலப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.