ஜெயம் ரவியை வைத்து இரண்டு இரண்டாம் பாக படங்களை இயக்கும் மோகன் ராஜா | படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம் | ஹிந்தி படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து | சொந்த வீடு கனவை நனவாக்கிய சரண்யா | கன்னடத்தில் ஹீரோயினாக வரவேற்பு பெற்ற தமிழ் சீரியல் நடிகை | கார்த்தியுடன் நடிக்கும் சீரியல் நடிகை | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் மகேஷ் பாபு? | கங்குவா படத்தில் ராணா? | தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் ரீ ரிலீஸ் ஆகும் முத்து | மகாநதி தொடரில் என்ட்ரி கொடுக்கும் திவ்யா கணேஷ் |
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் ஜெய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்து வருகிறர்கள். யுவன்சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். 19 வருடங்களுக்கு பிறகு சுந்தர் சி - யுவன்சங்கர் ராஜா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
மேலும் இப்படத்தில் மாளவிகா ஷர்மா, அம்ரிதா ஐய்யர், ஐஸ்வர்யா தட்டா, ரைஷா வில்சன், திவ்ய தர்ஷினி, யோகிபாபு, கிங்ஸ்லி, பிரதாப் போதன், சம்யுக்தா ஷண்முகம் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு குறித்த தகவல் கசிந்துள்ளது. இப்படத்திற்கு 'காபி வித் காதல்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரபூர்வமாக தலைப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.