பழம்பெரும் பாடகி, நடிகை பாலசரஸ்வதி தேவி காலமானார் | நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு |
மாநாடு படத்தை அடுத்து மன்மதலீலை என்ற படத்தை இயக்கிய வெங்கட்பிரபு அடுத்து நாகசைதன்யாவை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். வெங்கட்பிரபு எங்கு சென்றாலும் அவரை துரத்தும் ஒரு கேள்வி மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகம். இது குறித்து ஏற்கனவே தான் அளித்த பல பேட்டிகளில், மங்காத்தா இரண்டாம் பாகத்துக்கான கதையை அஜித்திடத்தில் கூறி விட்டதாகவும் அவரது அழைப்பு எப்போது வந்தாலும் உடனே அந்த படத்தை தொடங்குவேன் என்று கூறி இருந்தார் வெங்கட்பிரபு.
இந்நிலையில் தற்போது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது மீண்டும் மங்காத்தா-2 படம் குறித்து இன்னொரு தகவலை வெளியிட்டுள்ளார் வெங்கட்பிரபு. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் இன்னும் சிறப்பான கதையை தயார் செய்து வைத்துள்ளேன். அதோடு அஜித் மற்றும் விஜய் இருவரையும் வைத்து மங்காத்தா 2 படத்தை எடுக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறேன். இந்த கதையை அவர்கள் இருவரிடத்திலும் கூறிவிட்டேன். மங்காத்தா 2 படம் விரைவில் உருவாகும் என்று தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.