டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

சென்னை : சேவை வரி நிலுவைத் தொகை 1.87 கோடி ரூபாய் செலுத்துமாறு, இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, மத்திய ஜி.எஸ்.டி., புலனாய்வுத் துறை 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.
இது குறித்து, மத்திய ஜி.எஸ்.டி., புலனாய்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: இசையமைப்பாளர் இளையராஜா, தன் பாடல்களுக்கான காப்புரிமை வாயிலாக, பல கோடி ரூபாய் கட்டணம் வசூலித்துள்ளார். ஆனால், அதற்கான சேவை வரியை அரசுக்கு செலுத்தவில்லை. குறிப்பாக, 2013 - 14ம் நிதியாண்டுக்கான வரி செலுத்தவில்லை என்றும், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறும், புலனாய்வுத் துறை தலைமை இயக்குனர், பிப்ரவரி 28ல், இளையராஜாவுக்கு, 'சம்மன்' அனுப்பியுள்ளார். அதில், 'சேவை வரி செலுத்தாததால் விசாரணைக்காக, மார்ச் 10ம் தேதி காலை 11:00 மணிக்கு ஆஜராக வேண்டும்' என கூறப்பட்டுள்ளது. ஆனால், இளையராஜா ஆஜராகவில்லை.
அதைத் தொடர்ந்து, மார்ச் 28ல் ஆஜராகும்படி, புலனாய்வுத் துறை, மீண்டும் சம்மன் அனுப்பியது; அப்போதும் அவர் ஆஜராகவில்லை. இதே போல, மூன்று முறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகவில்லை. ஆனால், 2013 - 14ம் நிதியாண்டின் அவரது கணக்கை ஆய்வு செய்ததில், அவர் சேவை வரி செலுத்த வேண்டும் என்பதும், தற்போது வரை, 1.87 கோடி ரூபாய் நிலுவைத் தொகை உள்ளது என்றும், ஜி.எஸ்.டி., புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. எனவே, நிலுவை தொகையை உடனடியாக செலுத்துமாறு, அவருக்கு இறுதி, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை, அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.




