பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் | மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ் |
'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் ஷிவாங்கி. அந்த பிரபலத்தால் தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். நேற்று ஷிவாங்கி, நடிகர் விஜய்யுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து, “ஜாலி ஓ ஜிம்கானா' படப்பிடிப்பின் போது இது நடந்தது. உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி தளபதி, சிவகார்த்திகேயன் அண்ணா உங்களுக்கு எவ்ளோ நன்றி சொன்னாலும் பத்தாது,” என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
விஜய்யுடன் போட்டோ எடுப்பதற்கும், அவரை சந்திப்பதற்கும் சிவகார்த்திகேயன் தான் ஏற்பாடு செய்திருப்பால் போலிருக்கிறது. 'பீஸ்ட்' இயக்குனர் நெல்சன், சிவகார்த்திகேயன் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
ஷிவாங்கியின் இந்தப் பதிவிற்கு லட்சக்கணக்கான லைக்குகளும், ஆயிரக்கணக்கான கமெண்ட்டுகளும் கிடைத்துள்ளன.