நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
சென்னை : குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் என பேசிய தன் பேச்சுக்கு பாக்யராஜ் மன்னிப்பு கோரியுள்ளார்.
தமிழக பா.ஜ., சார்பில் நடந்த நுால் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் பேசும் போது, 'மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்' எனக் கூறினார். இவரது பேச்சு சர்ச்சையான நிலையில், தன் பேச்சுக்கு பாக்யராஜ் மன்னிப்பு கோரியுள்ளார்.
அவர் அளித்த பேட்டி: நான் பங்கேற்ற நிகழ்ச்சியில் 'குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்' என நான் கூறிய வார்த்தை தவறான அர்த்தத்தை உருவாக்கி விட்டதை அறிந்து, அதிர்ந்தேன். மாற்றுத்திறனாளிகளுக்கும் குறை பிரசவத்தில் பிறந்தவர்களுக்கும் சம்பந்தம் இல்லை. கிராமத்தில் ஓரிரு மாதத்தில் முன் பிறந்தவர்களை குறை பிரசவம் என்பவர், அவர்களிடம் எந்த குறையும் இருக்காது. மாற்றுத்திறனாளிகள் மீது எனக்கு அக்கறை உண்டு. நான் தவறாக பேசியதாக நினைத்தால், புண்படுத்தி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.
நான் பா.ஜ.,வை சேர்ந்தவன் அல்ல. தமிழில் படித்து, வளர்ந்து தமிழ் தான் எனக்கு சோறு போடுகிறது. ஆரம்பத்தில் இருந்தே திராவிட இயக்க தலைவர்களின் கருத்துக்களை கேட்டே வளர்ந்தேன். என் படமும் திராவிட கருத்தையே வலியுறுத்தி வந்தது. இனியும் திராவிட இயக்க கருத்துக்களுடனேயே என் பயணம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.