ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ், தெலுங்கில் சில பல ஆண்டுகளுக்கு முன்பு முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் அனுஷ்கா. 'பாகுபலி' இரண்டு பாகங்களிலும் நடித்து பெரிய வரவேற்பையும் பெற்றார். அதற்கடுத்து அவர் நடித்து வெளிவந்த 'பாகமதி' படம் கூட வெற்றி பெற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் நடித்த 'நிசப்தம்' படம் ஓடிடி தளத்தில் வெளியானது. அதற்குப் பிறகு அவரது எந்தப் படங்களும் வெளியாகவில்லை.
நடிக்க வந்த வாய்ப்புகள் பலவற்றையும் அவர் வேண்டாமென சொன்னதாகத் தகவல். தற்போது ஒரே ஒரு தெலுங்குப் படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். 40ஐத் தொட்டுவிட்டதால் இன்றைய இளம் நடிகர்களுடன் அனுஷ்காவால் ஜோடி சேர முடியாததும் ஒரு காரணம் என்கிறார்கள்.
அவ்வப்போது சமூக வலைத்தளம் பக்கம் எட்டிப் பார்க்கும் அனுஷ்கா, நேற்று அவருடைய அப்பாவின் பிறந்தநாளுக்காக அப்பாவுடன் விதவிதமாக எடுத்த செல்பி புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, “வருடங்கள் கடந்து போனாலும், நீங்கள் எவ்வளவு வயதை அடைவீர்கள் என்பது ஒரு விஷயமே அல்ல. நான் எப்போதும் உங்கள் குட்டிப் பொண்ணு தான். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பா,” என வாழ்த்து தெரிவித்துள்ளார்.