Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

5 கோடி மோசடி புகாருக்கும், எனக்கும் சம்பந்தமில்லை : கமிஷனர் அலுவலகத்தில் விமல் விளக்கம்

21 ஏப், 2022 - 10:46 IST
எழுத்தின் அளவு:
Vimal-explain-about-foregery-complaint-against-him

3 ஆண்டுகளுக்கு முன்பு விமல் நடித்த களவாணி 2ம் பாகம் வெளிவந்தது. இந்த படத்திற்காக விமல் தன்னிடம் 5 கோடி ரூபாய் வரை வாங்கிவிட்டு அதனை திருப்பித் தராமல் ஏமாற்றி வருகிறார் என்று அரசு பிலிம்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர் கோபி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இந்த புகார் தொடர்பாக விமல் நேற்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விளக்க மனு கொடுத்தார். அதில் 5 கோடி மோசடி புகாருக்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை. அவர்கள்தான் என்னை மிரட்டி பணம் பறிக்க நினைக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

அந்த மனுவில் விமல் கூறியிருப்பதாவது: கடந்த 2016ம் ஆண்டு இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கிய மன்னர் வகையறா என்ற படத்தில் நடித்தேன். பண பிரச்னை காரணமாக அந்த படத்தை எனது ஏ3வி சினிமா தயாரிப்பு நிறுவனம் மூலம் வெளியிட்டேன். இந்த படத்தை முதலில் தயாரித்தது கணேஷ் என்பவர். அவரால் படத்தை தயாரிக்க முடியவில்லை என்பதால் அவர் விலகிவிட்டார். பிறகு சிங்காரவேலன் பைனான்சியர் கோபி என்பவரை அறிமுகம் செய்து அவர் மூலம் படத்தை தயாரிக்க பணம் ஏற்பாடு செய்து தந்தார். அவர்களை நம்பி பல காசோலைகள் மற்றும் ஆவணங்களிலும் கையெழுத்திட்டேன்.

இந்நிலையில் படத்தை தயாரிக்க 3 கோடி செலவானதாகவும், அதனை விற்பனை செய்ததில் 4 கோடி கிடைத்ததாகவும் சிங்காரவேலன் தெரிவித்தார். அந்த 4 கோடி பணமும் படத்திற்காக கடனாக வாங்கிய 3 கோடி பணத்திற்கான வட்டி என சிங்காரவேலன் தெரிவித்தார். அசல் 3 கோடியை படங்கள் நடித்த சம்பளத்தின் மூலம் கொடுத்தேன். இதனிடையே மன்னர் வகையறா படத்தை விற்பனை செய்ததில் 8 கோடி கிடைத்ததை மறைத்து பொய் கணக்கு மூலம் என்னை சிங்காரவேலன் மோசடி செய்து விட்டார்.

மேலும் சிங்காரவேலன் செய்த மோசடிக்கு எனது பெயரை பயன்படுத்தியுள்ளார். அதற்கு உடந்தையாக கோபி மற்றும் விக்னேஷ், கண்ணன், திருநாவுக்கரசு ஆகியோர் செயல்பட்டுள்ளனர். அவர்கள் மீது 2021ம் ஆண்டு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அதன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிங்காரவேலன் உட்பட பலர் இந்த வழக்கில் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ளனர். வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், சிங்காரவேலன் களவாணி-2 படத்திற்கு எதிராக பொய் புகார் கொடுத்துள்ளார். எனவே என்னிடம் பெற்ற வங்கி காசோலைகள் மற்றும் ஆவணங்களை தவறாக பயன்படுத்த கூடாது, இது சட்டப்படி குற்றமாகும். எனவே என் மீது பொய் புகார் அளித்து எனது பெயரை கெடுக்கும் கோபி, சிங்காரவேலன், திருநாவுக்கரசு, விக்னேஷ், சிவா, வேல்முருகன் உள்ளிட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
எப்பவும் உங்க குட்டிப் பொண்ணுதான் - அனுஷ்காஎப்பவும் உங்க குட்டிப் பொண்ணுதான் - ... 52 உதவி இயக்குனர்களுக்கு படவாய்ப்பு பெற்றுத் தரும் இயக்குனர்கள் சங்கம் 52 உதவி இயக்குனர்களுக்கு படவாய்ப்பு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in