Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அம்பேத்கர் - மோடி ஒப்பீடு கருத்தை திரும்ப பெறமாட்டேன் - இளையராஜா உறுதி

18 ஏப், 2022 - 12:52 IST
எழுத்தின் அளவு:
I-will-never-set-back-my-comment-about-Ambedkar-and-Modi-says-Ilaiyaraja

பிரதமர் மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக பலர் கருத்து தெரிவித்த நிலையில், தனது கருத்தை பின் வாங்க போவதில்லை என இளையராஜா கூறியதாக அவரது தம்பியும், இயக்குனருமான கங்கை அமரன் தெரிவித்துள்ளார். மேலும் பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, இளையராஜாவை விமர்சிப்பவர்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜா புத்தகம் ஒன்றுக்கு எழுதிய முன்னுரையில், ‛பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து மோடியை இளையராஜா புகழ்வதாக கூறி பலரும் அவரை விமர்சனம் தெய்தனர். அதேநேரத்தில் தமிழக பா.ஜ.,வினர் இளையராஜாவின் கருத்துக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். சிலர் இளையராஜா தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும் என குரல் கொடுத்தனர். ஆனால் இளையராஜா மறுத்துவிட்டார்.


இதுகுறித்து இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் கூறியதாவது : இதுபற்றி இளையராஜாவிடம் பேசினேன். அதற்கு அவர் மற்றவர்கள் கருத்து சொல்வது போன்று நானும் என் கருத்தை கூறினேன். அதற்கு எதிர் விமர்சனங்கள் வந்தாலும் நான் ஏற்கிறேன். என் எண்ணத்தில் மோடி உள்ளார், அதுவே என் பேச்சில் வந்தது. பதவி வாங்க வேண்டும் என நான் அவரை புகழ்ந்து பேசவில்லை. எனக்கு எந்த பதவியும் தேவையில்லை. நான் பாடல்களுக்கு இசையமைக்கிறேன். சிலர் நன்றாக இருக்கும் என்பார்கள், சிலர் நல்லா இல்லை என்பார்கள். அதுபோன்றே இந்த கருத்தையும் ஏற்கிறேன். என் கருத்தை சொல்ல சுதந்திரம் உள்ளது. மோடியையோ, அம்பேத்கரையோ நான் விமர்சித்து பேசவில்லை. இதற்காக நான் ஒவ்வொருத்தருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. நான் படத்திற்கு போட்ட டியூனை திரும்ப பெற மாட்டேன். அதேபோல் நான் கூறிய கருத்தையும் திரும்ப பெறவேண்டிய அவசியமில்லை'' என சொன்னதாக கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.

ஜேபி நட்டா கண்டனம்
பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, இளையராஜாவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‛‛தமிழகத்தில் ஆளும் தரப்புக்கு ஆதரவானவர்கள் இளையராஜாவை குறிவைத்து கருத்துகளால் தாக்குகின்றனர். தங்களுக்கு சாதகமாக பேசவில்லை என்பதற்காக இசைமேதையை அவமதிப்பது சரியான அணுகுமுறை கிடையாது. ஒவ்வொருவருக்கும் தனித்தனி கொள்கைகள், பார்வைகள் இருக்கும். தங்களுக்கு மட்டுமே ஒத்தூத வேண்டும் என நினைப்பது, வலியுறுத்துவது எப்படி சரியான ஜனநாயகமாகும்?'' என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
விக்னேஷ் சிவன், நயன்தாரா - வேலைக்கு நடுவுல கொஞ்சம் காதல்விக்னேஷ் சிவன், நயன்தாரா - வேலைக்கு ... அம்மன் வேடத்தில் பிந்து மாதவி அம்மன் வேடத்தில் பிந்து மாதவி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

ponssasi - chennai,இந்தியா
20 ஏப், 2022 - 12:01 Report Abuse
ponssasi இளையராஜா கருத்தை ஏற்றுக்கொள்கிறேன், இளையராஜா சொன்னதால் மோடி அம்பேத்கார் ஆக முடியாது இது ஒரு சாதாரண ஒப்பீடு. இதை சிலர் புகழ்வதுவும் சிலர் இகழ்வதுவும் வாடிக்கையான ஒன்று. எனது வாதம் என்னவெனில் GST. சரிவர செலுத்தவில்லை என இரண்டு ஆண்டுகளாக நோட்டீஸ் வந்து கொண்டிருக்கிறது, மார்ச் மாதம் இரண்டு நோட்டீஸ் வந்துள்ளதாக இன்று பத்திரிகைகளில் செய்தி. இரண்டு நோடிஸ்கும் இளையராஜா தரப்பிலிருந்து சரியான பதில் தரப்படவில்லை. GST. நோட்டீஸ் முடக்கத்தான் இளையராஜா இந்த பதிவை போட்டாரா? இவ்வளவு நாட்கள் இல்லாத மோடி பாசம் GST. அலுவலர்கள் நெருங்கும்போது எப்படி வருகிறது.
Rate this:
Kalaiselvan Periasamy - kuala lumpur,மலேஷியா
19 ஏப், 2022 - 10:18 Report Abuse
Kalaiselvan Periasamy வசைபாடுவது தான் தமிழர்களின் பண்பாடோ? இளையராஜாவின் கருத்தில் தவறு ஏதுமிருப்பதாக தெரியவில்லை. கிறுக்கு தமிழர்களே சற்று நிதானமாக யோசியுங்கள். எப்போதும் மது பாதையிலேயே இருக்க வேண்டாம்.
Rate this:
haridoss jennathan - VELLORE,இந்தியா
19 ஏப், 2022 - 09:31 Report Abuse
haridoss jennathan Well done சார்.
Rate this:
nizamudin - trichy,இந்தியா
19 ஏப், 2022 - 09:01 Report Abuse
nizamudin குஜராத் கலவரம் மறந்து விட்டீரா? இது போல கொடுமை உலகத்தில் இதுவரை நடக்கவில்லை /உலகில் இன்று யாரும் பாராட்டும் அளவுக்கு யாரும் இல்லை /எந்த கடவுள் சொன்னான் தனி ஒரு மனிதனை நூறு பேர் சேர்ந்து அடித்து உதைத்து கொள்வதற்கு /இந்தியர்களுக்கு இந்தியாவில் உயிர் பாதுகாப்பு இல்லாத நாடக இந்திய மாறிவருகிறது
Rate this:
sankar - Nellai,இந்தியா
19 ஏப், 2022 - 07:48 Report Abuse
sankar மோடியை பற்றி உண்மையை யாராவது சொன்னால் திருட்டு கூட்டத்திற்க்கு பொறுக்காது என்பது உணர்ந்துகொள்ள கூடியதே - இவர்கள் கட்டிவைத்து இருக்கும் மாயத்திரை நொறுங்குகிறதே அதனால்தான்
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in