‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து நடிகர் ஆனவர் சிவகார்த்திகேயன். இப்போது தமிழில் டாப் 10 நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இவரது பூர்வீக கிராமம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள திருவீழிமழலை ஆகும். பூர்வீக இசை குடும்பம் அவருடையது. சிவகார்த்திகேயன் தாத்தாக்களான கோவிந்தராஜா பிள்ளை, தட்சினாமூர்த்தி பிள்ளை இருவரும் அந்தக் காலத்தில் புகழ்பெற்ற நாதஸ்வராக கலைஞராக விளங்கியவர்கள்.
சிவகார்த்தியேனின் தந்தை போலீஸ் அதிகாரியாக திருச்சியில் பணியாற்றியதால் நீண்ட காலம் சிவகார்த்திகேயன் திருச்சியில் வளர்ந்தார். இந்த நிலையில் தாத்தாக்கள் வாழ்ந்த பூர்வீக கிராமமான திருவீழிமழலையில் புதிதாக வீடு கட்டியிருக்கிறார் சிவகார்த்திகேயன். தமிழ் புத்தாண்டு தினத்தன்று கிரஹபிரவேசம் நடந்துள்ளது. அதில் சிவகார்த்திகேயன் குடும்பத்தினருடன் கலந்து கொண்டிருக்கிறார்.