ஆர்த்தி ரவியின் பதிவுக்கு கெனிஷா பதிலடி | மேடம் டுசாட் மியூசியத்தில் மெழுகுச் சிலையுடன் போஸ் கொடுத்த ராம்சரண் | தயாரிப்பாளர் சர்ச்சை முடிந்து சமரசம் : படப்பிடிப்புக்கு திரும்பிய நிவின்பாலி | தேங்காய் பன்னுக்காக அலைந்த எனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு : கண் கலங்கிய சூரி | சூர்யா மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் : கார்த்திக் சுப்பராஜ் பதில் | ரஜினி பெயரும் 'தேவா', தனுஷ் பெயரும் 'தேவா' !! | தமிழ்த் தலைப்புகளை தவிர்க்கும் தமிழ்த் திரையுலகம் | ட்ரைன் : முழு கதையையும் இப்படி சொல்லிட்டீங்களே மிஷ்கின் | விஷால் திடீரென மயங்கியது ஏன்...? | கவலையில் கஜானா படக்குழு : ரிலீஸான படத்தை தள்ளி வைத்தது |
தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ராம்கோபால் வர்மா. தெலுங்கிலிருந்து பாலிவுட்டிற்குச் சென்று அங்கு வெற்றிக்கொடி நாட்டி பலருக்கும் வழி காட்டியவர். அவரது வழியில்தான் இன்று ராஜமௌலி உள்ளிட்டவர்களும் ஹிந்தியில் சாதித்து வருகிறார்கள்.
அவ்வப்போது சர்ச்சைக் கருத்துக்களைப் பதிவிடும் வர்மா, 'கேஜிஎப் 2' படம் பார்த்துவிட்டு மீண்டும் ஒரு சர்ச்சைக் கருத்தை, ஆனால், உண்மையான கருத்தைப் பதிவிட்டுள்ளார்.
“கேஜிஎப் 2' படத்தின் அசுரத்தனமான வெற்றி தெளிவான ஒரு ஆதாரமாக அமைந்துவிட்டது. ஒரு படத்தின் ஹீரோவுக்கு அதிக சம்பளம் கொடுத்து வேஸ்ட் செய்வதை விட, படத்தின் மேக்கிங்கிற்கு அதிக பணம் செலவழித்தால் பெரிய தரமும், மிகப் பெரிய வெற்றியும் வரும்.
'ஹிந்தித் திரையுலகத்தை விடுங்கள். கேஜிஎப் படம் வரும் வரை தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகம் கன்னட சினிமாவை சீரியசாக எடுத்துக் கொண்டதேயில்லை. ஆனால், இப்போது பிரசாந்த் நீல் அதை உலக வரை படத்தில் வைத்துவிட்டார்.
மும்பைக்கு மிஷின் கன்னுடன் வந்து, ராக்கி பாய் வில்லன்களை எப்படி சுட்டார் என்பதை ரசித்தேன். ஆனால், யஷ், அனைத்து பாலிவுட் ஸ்டார்களின் முதல் நாள் வசூலையும் சுட்டுத் தள்ளிவிட்டார். படத்தின் இறுதி வசூல், கன்னட சினிமாவிலிருந்து பாலிவுட்டிற்கு ஒரு நியூக்ளியர் பாம் போட்டது போல இருக்கப் போகிறது.
பிரசாந்த் நீலின் கேஜிஎப் 2 ஒரு கேங்ஸ்டர் படம் மட்டுமல்ல, அது பாலிவுட்டிற்கு ஒரு ஹாரர் படமும் கூட. அதன் வெற்றியைப் பற்றி அவர்கள் வரும் ஆண்டுகளிலும் கனவு கண்டுகொண்டிருப்பார்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.