புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ராம்கோபால் வர்மா. தெலுங்கிலிருந்து பாலிவுட்டிற்குச் சென்று அங்கு வெற்றிக்கொடி நாட்டி பலருக்கும் வழி காட்டியவர். அவரது வழியில்தான் இன்று ராஜமௌலி உள்ளிட்டவர்களும் ஹிந்தியில் சாதித்து வருகிறார்கள்.
அவ்வப்போது சர்ச்சைக் கருத்துக்களைப் பதிவிடும் வர்மா, 'கேஜிஎப் 2' படம் பார்த்துவிட்டு மீண்டும் ஒரு சர்ச்சைக் கருத்தை, ஆனால், உண்மையான கருத்தைப் பதிவிட்டுள்ளார்.
“கேஜிஎப் 2' படத்தின் அசுரத்தனமான வெற்றி தெளிவான ஒரு ஆதாரமாக அமைந்துவிட்டது. ஒரு படத்தின் ஹீரோவுக்கு அதிக சம்பளம் கொடுத்து வேஸ்ட் செய்வதை விட, படத்தின் மேக்கிங்கிற்கு அதிக பணம் செலவழித்தால் பெரிய தரமும், மிகப் பெரிய வெற்றியும் வரும்.
'ஹிந்தித் திரையுலகத்தை விடுங்கள். கேஜிஎப் படம் வரும் வரை தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகம் கன்னட சினிமாவை சீரியசாக எடுத்துக் கொண்டதேயில்லை. ஆனால், இப்போது பிரசாந்த் நீல் அதை உலக வரை படத்தில் வைத்துவிட்டார்.
மும்பைக்கு மிஷின் கன்னுடன் வந்து, ராக்கி பாய் வில்லன்களை எப்படி சுட்டார் என்பதை ரசித்தேன். ஆனால், யஷ், அனைத்து பாலிவுட் ஸ்டார்களின் முதல் நாள் வசூலையும் சுட்டுத் தள்ளிவிட்டார். படத்தின் இறுதி வசூல், கன்னட சினிமாவிலிருந்து பாலிவுட்டிற்கு ஒரு நியூக்ளியர் பாம் போட்டது போல இருக்கப் போகிறது.
பிரசாந்த் நீலின் கேஜிஎப் 2 ஒரு கேங்ஸ்டர் படம் மட்டுமல்ல, அது பாலிவுட்டிற்கு ஒரு ஹாரர் படமும் கூட. அதன் வெற்றியைப் பற்றி அவர்கள் வரும் ஆண்டுகளிலும் கனவு கண்டுகொண்டிருப்பார்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.