டாப்ஸி படத்தில் கதாநாயகியாக சமந்தா | விக்ரம் படம் பார்த்துவிட்டு கமலை வாழ்த்திய வானதி சீனிவாசன் | மலையாள இயக்குனர் தமிழில் இயக்கும் படத்தில் ஹீரோவாக சரத்குமார் | உருக்கமாக பதிவிட்டு அனுதாபம் தேடும் பாலியல் புகார் நடிகர் | ஆதித்த கரிகாலன், வந்தியத் தேவன் வருகை : மற்றவர்கள் எப்போது ? | உதயநிதியின் அடுத்த படத் தலைப்பு 'கழகத் தலைவன்' ? | எதற்கும் அஞ்சமாட்டேன் ; உயிரை விடவும் தயார் : காளி போஸ்டர் சர்ச்சைக்கு லீனா மணிமேகலை பதில் | கைதி படத்தின் ஹிந்தி ரீமேக் : இயக்குநர் திடீர் மாற்றம் | பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் : அறிமுக நடிகை அதிர்ச்சி தகவல் | ஹிந்தி விக்ரம் வேதா பட்ஜெட் அதிகரிப்பா? - தயாரிப்பு தரப்பு விளக்கம் |
குவைத் : விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் பதட்டத்தை தூண்டுகிறது, அமைதியை குலைப்பதாக இருக்கிறது என மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தமிமுன் அன்சாரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் வெளியாகி உள்ளது. முஸ்லீம்களை பயங்கரவாதிகள் போன்று சித்தரித்துள்ளதாக கண்டனம் எழுந்த நிலையில் இப்படத்திற்கு குவைத்தில் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் குவைத்தில் தமிழக மக்களுக்கு மத்தியில் பல்வேறு சேவைகளை ஆற்றி வரும் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் சார்பு அமைப்பான மனிதநேய கலாச்சாரப் பேரவை சார்பில் இப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் முன்னாள் எம்எல்ஏ.,வும், மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளருமான தமிமுன் அன்சாரி பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது : புனித ரமலான் அமைதியை தருகிறது. தமிழகத்தில் திரைப்படங்கள் வழியே சிலர் வெறுப்பை விதைக்கிறார்கள். முஸ்லீம் சமூகத்தை கொச்சைப்படுத்த முனைகிறார்கள். ஏற்கனவே அர்ஜுன், விஜயகாந்த், கமல்ஹாஸன் போன்றவர்கள் இந்த தவறை செய்தார்கள். இப்போது பீஸ்ட் படம் விஜய் இந்த தவறை மூலம் செய்துள்ளார். ஏற்கனவே துப்பாக்கி படம் மூலம் அவர் இதுமாதிரியான பிரச்னைகளை சந்தித்தார்.
![]() |