கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
இந்தியத் திரையுலகில் இதுவரை எந்த ஒரு படமும் வசூல் செய்யாத அளவிற்கு முதல் நாள் வசூலில் 'கேஜிஎப் 2' சாதனை படைத்துள்ளதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியாகி உள்ள இப்படத்திற்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்திய அளவில் பல இடங்களில் இப்படம் புதிய வசூல் சாதனையைப் படைத்து வருகிறது. ஹிந்தியில் மட்டும் நேற்று ஒரே நாளில் 60 கோடி வரை வசூலித்திருக்கும் என்கிறார்கள். மற்ற தென்னிந்திய மாநிலங்கள், உலகின் பிற பகுதிகள் என அனைத்தும் சேர்த்து சுமார் 150 கோடி வரை வசூலித்திருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தொடர்ந்து மூன்று நாட்களும் விடுமுறை நாட்கள் என்பதால் அதற்குள்ளாக இப்படம் 500 கோடி வசூலைப் பெற்றுவிடும் வாய்ப்பும் உள்ளது என்று சொல்கிறார்கள். ஒரு கன்னடப் படம் இந்தியத் திரையுலகில் இந்த அளவிற்கு வசூல் சாதனை படைப்பது மிகப் பெரும் விஷயம்.
ராஜமவுலியை மிஞ்சும் அளவிற்கு இயக்குனர் பிரசாந்த் நீல், பிரபாஸை மிஞ்சும் அளவிற்கு யஷ் உயர்ந்துள்ளதாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள்.