ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பின் சூர்யா நடிப்பில் பாலா இயக்கும் படம் மற்றும் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படங்கள் தயாராகி வருகின்றன. இவற்றில் பாலா படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. மீனவ பிரச்னை தொடர்பான இந்த படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நடக்கிறது.
இந்நிலையில் இந்த படப்பிடிப்பின் போது ஓய்வு நேரத்தில் இருக்கும் சூர்யா தனது அடுத்த படமான ‛வாடிவாசல்' படத்திற்கும் தயாராகி வருகிறார். அதாவது ‛வாடிவாசல்' படம் ஜல்லிக்கட்டு, ஜல்லிக்கட்டு காளை தொடர்பான கதை என்பதால் காளைகளுடன் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பாலா படத்தில் இருக்கும் சூர்யா, ஓய்வு நேரத்தில் மாடு ஒன்றை பிடித்தபடி ‛என் தமிழ் - இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்' என தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடம் வைரலானது.