22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை | அஜித்தை சந்தித்த நடிகர் சதீஷ் |
எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பின் சூர்யா நடிப்பில் பாலா இயக்கும் படம் மற்றும் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படங்கள் தயாராகி வருகின்றன. இவற்றில் பாலா படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. மீனவ பிரச்னை தொடர்பான இந்த படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நடக்கிறது.
இந்நிலையில் இந்த படப்பிடிப்பின் போது ஓய்வு நேரத்தில் இருக்கும் சூர்யா தனது அடுத்த படமான ‛வாடிவாசல்' படத்திற்கும் தயாராகி வருகிறார். அதாவது ‛வாடிவாசல்' படம் ஜல்லிக்கட்டு, ஜல்லிக்கட்டு காளை தொடர்பான கதை என்பதால் காளைகளுடன் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பாலா படத்தில் இருக்கும் சூர்யா, ஓய்வு நேரத்தில் மாடு ஒன்றை பிடித்தபடி ‛என் தமிழ் - இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்' என தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடம் வைரலானது.