ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
சூர்யாவின் திரையுலக வாழக்கையில் நந்தா மற்றும் பிதமாகன் படம் மூலம் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் இயக்குனர் பாலா. கிட்டத்தட்ட பதினெட்டு வருடங்களுக்கு பிறகு இவர்கள் இருவரும் சூர்யாவின் 41வது படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர். இந்தப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக கன்னியாகுமரி பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில் மீனவராக சூர்யா நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
இதற்காக கடற்கரை பகுதியில் மீனவர்கள் வசிக்கும் குடிசைகள் போல பல குடிசை வீடுகளை நிஜமாகவே உருவாக்கி பட்டப்படிப்பை நடத்தி வருகின்றனர். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் அவற்றை பிரிக்காமல், அந்தப்பகுதியில் வசிக்கும் வீடில்லாத மக்கள் சிலருக்கே அவற்றை இலவசமாக கொடுக்க முடிவு செய்துள்ளாராம் சூர்யா. அவரது இந்த முடிவுக்கு அந்த பகுதி மக்களிடமும் ரசிகர்களிடமும் இருந்து பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன.