மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? |
நடிகைகள் குஷ்பு, ரோஜா ஆகிய இருவரும் 1990 - 2000 ஆண்டுகளில் சினிமாவில் பிசியாக நடித்து வந்தவர்கள். அதோடு வீரம் வெளஞ்ச மண்ணு, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை போன்ற படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள். கடந்த பல ஆண்டுகளாக ஆந்திராவில் உள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இடம் பெற்றிருக்கும் நடிகை ரோஜா, நகரி தொகுதியில் தொடர்ந்து எம்எல்ஏவாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி அமைந்தபோதே ரோஜாவுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அவருக்கு அந்த பதவி வழங்கப்படவில்லை. தற்போது ஆந்திர மாநில அமைச்சரவையில் மாற்றம் செய்த ஜெகன்மோகன் ரெட்டி புதிதாக நியமித்த அமைச்சர்களில் ரோஜாவையும் ஒரு அமைச்சராக்கி இருக்கிறார். இதையடுத்து ரோஜாவுக்கு திரையுலகத்தில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கிறது. நடிகை குஷ்பூ ‛‛ஆந்திரப்பிரதேச அமைச்சராக பதவியேற்ற ரோஜா செல்வமணிக்கு வாழ்த்துக்கள்'' என்று பதிவிட்டுள்ளார்.