நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
பொதுவாக திரையுலக பிரபலங்கள், குறிப்பாக நடிகர் நடிகைகள் தாங்கள் வாகனங்களில் பயணிப்பது யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காகவும் ரசிகர்களின் அன்புத்தொல்லையில் இருந்து தப்பிப்பதற்காகவும் தங்களது கார் கண்ணாடிகளில் கருப்பு பிலிம்களை ஒட்டி வலம் வருகின்றனர். இந்தியாவில் 2012லிருந்து இப்படி கருப்பு நிற பிலிம் ஓட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஆந்திராவில் தற்போது போக்குவரத்து போலீஸார் இதை கடுமையாக கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்தவகையில் சமீபத்தில் மார்க்கெட் பகுதியில் அப்படி கருப்பு பிலிம் ஒட்டப்பட்ட ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் பயணித்தது தெரிய வந்துள்ளது. பிரபல நடிகராக இருந்தாலும் விதிமீறல் என்பதால் ரூ.700 அபராதம் விதித்து, அதனை வசூலித்த பின்னரே அவரை அனுப்பி வைத்தனராம். அல்லு அர்ஜுனும் எந்தவித் வாக்குவாதத்திலும் ஈடுபடாமல் அபாரத தொகையை செலுத்திவிட்டு அமைதியாக சென்றுவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது.