இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சிம்பு நடித்த ‛மாநாடு' படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேசும் ‛வந்தான் சுட்டான் செத்தான் ரிப்பிட்டு' என்ற வசனம் பிரபலம். இதை வைத்து நிறைய மீம்ஸ்கள் வந்தன. இப்போது இதில் வரும் செத்தான் என்ற வார்த்தையை மட்டும் நீக்கி விட்டு ‛வந்தான் சுட்டான் ரிப்பிட்டு' என்ற பெயரில் ராம் பாலா ஒரு படத்தை இயக்குகிறார். இந்த படமும் இவரின் முந்தைய படங்களான தில்லுக்கு துட்டு 1,2, இடியட் பட பாணியில் காமெடி கலந்த திரில்லர் கதையில் உருவாகிறது. இதில் சந்திரமவுலி நாயகனாக நடிக்க, மீனாக்ஷி, ரெபா மோனிகா நாயகிகளாக நடிக்கின்றனர். சந்தோஷ் தயாநிதி மற்றும் கே.சி.பாலசாரங்கன் இசையமைக்கின்றனர். இதன் படப்பிடிப்பு துவங்கி, வளர்ந்து வருகிறது.