'குபேரா' இயக்குனருக்கு பேனா பரிசளித்த சிரஞ்சீவி | 'மாமன்' படத்தில் சுவாசிகா, பால சரவணனின் நடிப்பு: சூரி வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | சசிகுமாரின் 'பிரீடம்' படத்தின் டீசர் வெளியானது! | பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு கர்மாவும், கடவுளும் பதிலடி கொடுக்கட்டும்! - பாடகி சின்மயி | ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை திருமணத்திற்கு அழைத்த நாகார்ஜுனா | விஜய் நடித்த 'லியோ' படப் பாடல் படப்பிடிப்பு: 35 லட்சம் முறைகேடு புகார் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பில் பிரபல நிறுவனம் | ஒரு செங்கலை கூட ஆட்ட முடியாது! யாரை சொல்கிறார் தனுஷ்? | ராஜா சாப் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு : டிச., 5ல் வெளியாகிறது | கமல் மன்னிப்பு கேட்கவில்லை; வேதனை அளிப்பதாக கடிதம் - கர்நாடகாவில் தக்லைப் ரிலீஸ் ஒத்திவைப்பு |
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் தனுஷ், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிப்பில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்த படம் 'திருச்சிற்றம்பலம்'. ஒரு இயல்பான காதல் கதையாக ரசிகர்களின் மனதில் இப்படம் இடம் பிடித்தது. படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக நித்யா மேனனின் கதாபாத்திரமும் நடிப்பும் இருந்தது. அதே சமயம், படத்தில் கதாநாயகனாக நடித்த தனுஷின் நடிப்பையும் விட்டுவிட முடியாது. அவர்கள் இருவருடைய நடிப்பும் திரையில் பிரமாதமாக இருந்தது.
இப்படத்தைப் பார்த்த இயக்குனர் ஷங்கர் கூறுகையில், “திருச்சிற்றம்பலம், அழகான ஒரு படம். வலிகளைத் தொடர்ந்து வரும் அன்பான தருணங்களில்தான் அழகு இருக்கிறது. நித்யா மேனனின் கதாபாத்திரமும், அவரது சிறப்பான நடிப்பும், இதயத்தை கொள்ளையடிக்கிறது. மித்ரன் ஜவஹர் அற்புதமாக எழுதியுள்ளார். டிஎன்எ, வழக்கம் போல, அவர்களது சிறப்பில்…பிரகாஷ்ராஜ், பாரதிராஜா ஆகியோருக்கும் குழுவினருக்கும் வாழ்த்துகள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
'திருச்சிற்றம்பலம்' படம் இன்று மூன்றாவது வாரத்தைத் தொட்டுள்ளது. படத்தின் வசூல் 100 கோடியை நெருங்க வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.