'சக்திமான்' ஆக ரன்வீர் சிங்: பசில் ஜோசப் உறுதி | கோவை தமிழ் பிடிக்கும்: கிர்த்தி ஷெட்டி | அஜித் படத்தை இயக்கும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை! சொல்கிறார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் | 'ஜனநாயகன்' கடைசி படமா? இல்லையா? இன்னும் முடிவெடுக்காத விஜய்! | ஜூலை 4ம் தேதி திரைக்கு வரும் சூர்யா சேதுபதியின் 'பீனிக்ஸ் வீழான்' | பிரகாசமான எதிர்காலம்: விஜய் வெளியிட்ட அறிக்கை! | அருண்குமார் இயக்கத்தில் நடிக்க தயாராகும் கமல்ஹாசன்! அன்பறிவ் இயக்கும் படம் தள்ளிப் போகிறது! | போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது | சரிய வைத்த 'சிக்கந்தர்', காப்பாற்றிய 'குபேரா' | 'கூலி' முதல் சிங்கிள் அப்டேட்… இன்று மாலை 6 மணிக்கு… |
அடங்கமறு, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார் மற்றும் அரண்மனை 3 உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் நடிகை ராஷி கண்ணா. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தியிலும் பிசியாக நடித்து வரும் ராஷி கண்ணா தற்போது இந்தியில் ருத்ரா என்கிற படத்தில் நடித்துள்ளார். விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ராஷி கண்ணா தென்னிந்திய திரையுலகைப் பற்றி விமர்சித்து பேசியதாக ஒரு தகவல் கடந்த இரண்டு நாட்களாக சோசியல் மீடியாவில் பரவி வருகிறது. குறிப்பாக தென்னிந்திய திரையுலகில் நடிகைகளை வெறும் கிளாமராக தான் பயன்படுத்துகிறார்கள் என்பது போன்று அவர் கூறியதாகச் சொல்லப்படுகிறது.
ஆனால் இந்த தகவலை உடனடியாக மறுத்துள்ளார் ராஷி கண்ணா. இதுதொடர்பாக அவர் கூறுகையில், "நான் தென்னிந்திய சினிமா பற்றி விமர்சித்துப் பேசியதாக கடந்த சில நாட்களாக, ஒரு செய்தி சித்தரிக்கப்பட்டும் இட்டுக்கட்டியும் உருவாக்கப்பட்டு வலம் வருகிறது. நான் ஒருபோதும் அப்படி பேசியது இல்லை. நான் எந்தெந்த மொழிகளில் நடித்து வருகிறேனோ அவற்றுக்கு உரிய மரியாதையை தவறாமல் கொடுத்து வருகிறேன். தயவு செய்து இதுபோன்ற தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.