சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‛பீஸ்ட்' படம் அடுத்தவாரம் ஏப்.,13ம் தேதி திரைக்கு வர உள்ளது. நேற்று விஜய்யின் அடுத்த படமான விஜய் 66 பூஜையுடன் துவங்கி உள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சித்தலைவர்கள் உள்ளிட்ட பலரை விஜய் ரசிகர்கள் சமூகவலைதளங்களிலும், சுவரொட்டிகளிலும் இழிவாக பேசி மீம்ஸ், போஸ்டர்களை வெளியிட்டு வருகின்றன. இதுபற்றி விஜய்யின் கவனத்திற்கு சென்றுள்ளது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த், ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : ‛‛அரசுப்பதவிகளில் உள்ளோர்களை, அரசியல் கட்சித்தலைவர்களை, யாரையும் எக்காலத்திலும் இழிவு படுத்தும் வகையில் பத்திரிக்கை, இணையதளங்களில் போஸ்டர்களின் என எந்தத்தளத்திலும் எழுதவோ, பதிவிடவோ, மீம்ஸ் உள்ளிட்ட எதனையும் இயக்கத்தினர் வெளியிடக்கூடாது.
விஜய்யின் உத்தரவின் பேரில் ஏற்கனவே பலமுறை இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறோம். அதனை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து இயக்கத்தை விட்டும் நீக்கியுள்ளோம். இருப்பினும் இதை மீண்டும் யாரேனும் மீறினால் இனி அவர்களை இயக்கத்தை விட்டு நீக்குவதோடு, அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை விஜய் உத்தரவின் பேரில் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறேன்".
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.