ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஜய் நடிப்பில் துப்பாக்கி, கத்தி, சர்கார் போன்ற படங்களை இயக்கியவர் ஏ. ஆர். முருகதாஸ். மீண்டும் விஜய் 65ஆவது படத்தை இயக்க இருந்தார். ஆனால் கதை விவகாரத்தில் பிரச்சினை காரணமாக அந்த படத்திலிருந்து முருகதாஸ் விலகி விட்டார். அதன் காரணமாகவே விஜய்யின் 65வது படத்தை நெல்சன் திலிப்குமர் இயக்கி உள்ளார். அதன் பிறகு சோனி பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு ஒரு அனிமேஷன் படத்தை முருகதாஸ் இயக்கி வருவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் அடுத்தபடியாக விக்ரம் மற்றும் விஜய்சேதுபதி ஆகிய இருவருக்கும் முருகதாஸ் கதை சொல்லி ஓகே பண்ணி விட்டதாக செய்தி வெளியாகி இருக்கிறது. ஆக்ஷன் கதைகளில் உருவாகும் இந்த படங்களை அடுத்து, அடுத்து இயக்கப் போகும் முருகதாஸ் விக்ரம் நடிக்கும் படத்தை முதலில் இயக்குவார் என்றும், அதன்பின் விஜய் சேதுபதி படத்தை இயக்குவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.