'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. ஏப்ரல் மாதம் இறுதியில் இப்படம் திரைக்கு வர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது நயன்தாரா, சமந்தா ஆகிய இருவரும் மிக நெருக்கமான தோழிகள் ஆகிவிட்டார்கள்.
இந்தநிலையில், காத்து வாக்குல் ரெண்டு காதல் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு முடிந்த போது சமந்தாவுக்கு ஒரு அழகிய கம்மல் ஒன்றை பரிசாக வழங்கியிருக்கிறார் நயன்தாரா. அந்த வாழ்த்து அட்டையில் அப்படத்தில் சமந்தாவின் கேரக்டரான கதீஜாவை குறிப்பிட்டு டியர் கதிஜா, வித் லவ் கண்மணி என தனது கேரக்டர் பெயரையும் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் நயன்தாரா . இதற்கு நன்றி தெரிவித்து உள்ள சமந்தா அந்த புகைப்படத்தை தனது சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார்.