மைசூரில் பிலிம் சிட்டி: கர்நாடக முதல்வர் அறிவிப்பு | 'ஊர் பூரா டாஸ்மாக்கை திறந்து வச்சிட்டு குடிக்கிறவனை தப்பு சொல்வதா?': பாட்டல் ராதா படத்தின் டீசர் வெளியானது! | ‛தீரன் அதிகாரம் இரண்டு' : மீண்டும் கார்த்தி - வினோத் கூட்டணி | ரூ.100 கோடி வசூலை நெருங்கியதா 'மகாராஜா'? | விதி விளையாடிவிட்டது : தர்ஷன் பற்றி மனம் திறந்த சிவராஜ்குமார் | நாகேஷ் - சிவகார்த்திகேயன் பாணியில் கதாநாயகனாக அறிமுகமாகும் பிக்பாஸ் ராஜூ | பத்திரிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் சித்திக் | ரூ.3 லட்சத்திற்கு ஏலம்போன மம்முட்டி எடுத்த புகைப்படம் | சத்ருகன் சின்ஹா மருத்துவமனையில் அனுமதி | தொடர்ந்து அவதூறு பரப்புகிறார் : சுசித்ரா மீது கார்த்திக் குமார் நீதிமன்றத்தில் புகார் |
நடிகை ரச்சிதா மகாலட்சுமி சின்னத்திரையின் நயன்தாரா என்று சொல்லும் அளவுக்கு பிரபலமானவர். கடந்த 10 வருடங்களில் தமிழ் சின்னத்திரையில் டாப் சேனல்களில் எல்லாம் நடித்துவிட்டார். தற்போது கலர்ஸ் தமிழ் சேனலில் 'இது சொல்ல மறந்த கதை' என்ற தொடரில் ஒரு சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த தொடர் குறித்து அண்மையில் அவர் பேசியுள்ள வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில் அவர், 'இதற்கு முன்பு இரண்டு கதைகளை கேட்டிருந்தேன். ஆனால், சொல்ல மறந்த கதையில் ஒரு ஸ்பார்க் இருந்தது. சாதனா கதாபாத்திரத்துடன் என்னால் தனிப்பட்ட முறையில் கனெக்ட் செய்து கொள்ள முடிந்தது. ஏனென்றால் என் வீட்டு உதவியாளர் ஒரு விதவை. குழந்தைகளுக்கான அவரது கடின உழைப்பை நான் பார்த்து வருகிறேன். அவருடன் பேசி புரிந்து கொண்ட பின்பே சாதனா கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
இன்று சமூக ஊடகங்கள் மக்களின் ரசனையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இனிமேலும் காதல், மனைவி, கணவர், மாமியார் என சீரியல்களை எடுக்க முடியாது. அவர்கள் சிறந்த கதைகளை விரும்புகிறார்கள். எனவே, தொலைக்காட்சியில் நல்ல கதைகளை கொண்டு வருவது முக்கியம்' என கூறியுள்ளார்.