தொடர் வெற்றி : அடுத்தடுத்து வெளியாகும் சசிகுமார் படங்கள் | கேன்ஸ் திரைப்பட விழாவில் 'மாண்புமிகு பறை' | கேரளாவில் தாய்மாமன் கலாசார உறவு இல்லை: ஸ்வாசிகாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு | என்னை பற்றி தவறாக பேசுகிறவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார் : யோகிபாபு | பாகிஸ்தான் சார்ந்த ஓடிடி 'கன்டென்ட்' - தடை விதித்த மத்திய அரசு | சிம்ரனை தொடர்ந்து இலங்கை தமிழ் பேசும் தேவயானி | தக் லைப் அப்பா, மகன் மோதல் கதையா? | ஹீரோ ஆனார் கேபிஒய் பாலா | தியேட்டர், ஓடிடி… அடுத்து டிவியிலும் வரவேற்பைப் பெறாத 'கேம் சேஞ்ஜர்' | பிளாஷ்பேக்: சவாலுக்கு படம் எடுத்த பாலுமகேந்திரா |
'நாதஸ்வரம்' தொடரின் மூலம் சின்னத்திரை நடிகையாக ஸ்ருதி சண்முகம் அறிமுகமானார். தொடர்ந்து 'வாணி ராணி', 'கல்யாண பரிசு', 'பொன்னூஞ்சல்', 'பாரதி கண்ணம்மா' ஆகிய தொடர்களில் நடித்து வந்தார். இவருக்கும் அரவிந்த் சேகர் என்பவருக்கும் இந்த ஆண்டு தொடக்கத்தில் நிச்சயதார்த்தம் முடிந்தது. பாடி பில்டரான அர்விந்த் சேகர் அண்மையில் நடைபெற்ற ஜேபி கிங்க்ஸ் க்ளாசிக் 2022 போட்டியில் சில்வர் பட்டம் வென்றுள்ளார். இது இவரது முதல் போட்டியாகும்.
இந்த வெற்றி குறித்து பகிர்ந்துள்ள அர்விந்த், 'இந்த வெற்றிக்காக இவள் (ஸ்ருதி சண்முகம்) முழு அளவில் தியாகம் செய்துள்ளார். நான் செய்ய வேண்டியதெல்லாம் முழுமையான அர்ப்பணிப்புடன் விட்டுக் கொடுக்காமல் ஜெயிப்பது மட்டுமே' என கூறியுள்ளார்.
திருமணத்திற்கு முன்பே அழகான புரிதலுடன் இணைந்திருக்கும் இந்த ஜோடிக்கு தற்போது பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.