காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' | மதுபாலாவின் ‛சின்ன சின்ன ஆசை' | பிளாஷ்பேக் : இரண்டு காட்சிகளை வாங்கி இரண்டு படங்கள் தயாரித்த ஏவிஎம் | பிளாஷ்பேக் : அந்த காலத்திலேயே கலக்கிய 'டவுன் பஸ்' | தினமும் எம்ஜிஆரை வேண்டிக் கொண்டு நடித்தேன் : கார்த்தி | ரஜினி மாமனாராக நடிக்க வேண்டியது : திண்டுக்கல் லியோனி சொன்ன புது தகவல் | 25 வருடங்களுக்கு முன்பே ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிய பார்த்திபன் | டிசம்பர் 12ல் அறிவித்த படங்கள் சிக்கலின்றி வெளியாகுமா ? | தீவிர கதை விவாதத்தில் படையப்பா 2ம் பாகம் : ரஜினிகாந்த் புதிய தகவல் |

'நாதஸ்வரம்' தொடரின் மூலம் சின்னத்திரை நடிகையாக ஸ்ருதி சண்முகம் அறிமுகமானார். தொடர்ந்து 'வாணி ராணி', 'கல்யாண பரிசு', 'பொன்னூஞ்சல்', 'பாரதி கண்ணம்மா' ஆகிய தொடர்களில் நடித்து வந்தார். இவருக்கும் அரவிந்த் சேகர் என்பவருக்கும் இந்த ஆண்டு தொடக்கத்தில் நிச்சயதார்த்தம் முடிந்தது. பாடி பில்டரான அர்விந்த் சேகர் அண்மையில் நடைபெற்ற ஜேபி கிங்க்ஸ் க்ளாசிக் 2022 போட்டியில் சில்வர் பட்டம் வென்றுள்ளார். இது இவரது முதல் போட்டியாகும்.
இந்த வெற்றி குறித்து பகிர்ந்துள்ள அர்விந்த், 'இந்த வெற்றிக்காக இவள் (ஸ்ருதி சண்முகம்) முழு அளவில் தியாகம் செய்துள்ளார். நான் செய்ய வேண்டியதெல்லாம் முழுமையான அர்ப்பணிப்புடன் விட்டுக் கொடுக்காமல் ஜெயிப்பது மட்டுமே' என கூறியுள்ளார்.
திருமணத்திற்கு முன்பே அழகான புரிதலுடன் இணைந்திருக்கும் இந்த ஜோடிக்கு தற்போது பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.