‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க உருவாக உள்ள படம் 'வாடிவாசல்'. இப்படத்தின் அறிவிப்பு எப்போதோ வெளியானது. ஆனால், இயக்குனர் வெற்றிமாறனும், சூர்யாவும் வெவ்வேறு படங்களில் பிஸியாக இருந்ததால் இப்படத்தின் படப்பிடிப்பு காலதாமதம் ஆகி வருகிறது.
இதனிடையே, இப்படத்திற்கான டெஸ்ட் ஷுட் சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் நடைபெற்று வருகிறது. 'வாடிவாசல்' இடத்தை அப்படியே செட்டாக வடிவமைத்துள்ளனர். அதில் மாடு பிடி வீரராக சூர்யா கலந்து கொள்ளும் காட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள். மதுரை சுற்று வட்டாரப் பகுதிகளில் சூர்யா நடிக்க படப்பிடிப்பை மக்கள் முன் நடத்துவதில் சிரமம் ஏற்படலாம். எனவே, சென்னையிலேயே செட் அமைத்து டெஸ்ட் ஷுட் எடுத்து வருகிறார்களாம். இங்கு படமாக்கப்படுவது சரியாக வந்தால் முழு படப்பிடிப்பும் சென்னையில் நடக்கலாம் என்கிறார்கள்.
இந்த டெஸ்ட் ஷுட்டைப் பார்க்க நடிகர் சூரியும் சென்றுள்ளார். அது குறித்து, “அண்ணன் வெற்றிமாறன்- அண்ணன் சூர்யா மிரட்டும் "வாடிவாசல்"ன் டெஸ்ட் ஷூட் . ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வீரம் விளைஞ்ச நம்மண்ணின் பாரம்பரிய விளையாட்டின் பெருமையை உலகறியச் செய்யும் இந்த காவியம். வாடிவாசல் திறக்க நானும் காத்திருக்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நாயகனாக நடித்து வரும் 'விடுதலை' படப்பிடிப்பு முடிந்த பின் 'வாடிவாசல்' படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.