என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

ராதாகிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்து ஐந்து மொழிகளில் வெளியான படம் 'ராதேஷ்யாம்'. பான்--இந்தியா ஸ்டார் என 'பாகுபலி' படங்களின் மூலம் பெயரெடுத்து பிரபாஸ், 'சாஹோ' படத்தின் மூலம் ஹிந்தியில் மட்டும் சாதித்தார். மற்ற மொழிகளில் அப்படம் பலமாக சறுக்கியது.
'ராதேஷ்யாம்' படத்தை சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கியதாக தகவல் வெளியானது. 200 கோடி ரூபாய் அளவிற்கு தியேட்டர் வியாபாரம் நடைபெற்றது. ஹிந்தியில் மட்டுமே 100 கோடி ரூபாயைக் கடந்து வசூல் வரும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், 25 கோடி வசூலைத் தாண்டுவதற்கே படம் திக்கித் திணறிக் கொண்டிருக்கிறது.
ஒரு வாரம் முன்பு படத்தின் வசூல் 150 கோடியைக் கடந்துவிட்டதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்பின் எந்த வசூல் விவரத்தையும் வெளியிடவில்லை. கடந்த நான்கு நாட்களாக படம் பற்றி எதுவுமே பதிவிடவில்லை.
படத்தின் வசூல் 200 கோடியைத் தாண்டியிருக்க வாய்ப்பில்லை என்றே டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுமார் 100 கோடிக்கும் அதிகமாக இப்படத்தின் மூலம் நஷ்டம் வரும் என்றும் சொல்கிறார்கள். இந்தப் படத்தின் வசூல் ஏற்படுத்திய பாதிப்பால் பிரபாஸ் அடுத்து நடித்து வரும் பான்--இந்தியா படங்களின் வியாபாரம் பாதிக்கப்படவும் வாய்ப்புண்டு.