ஸ்லிம்மாக இருக்க ஊசியா : தமன்னா பதில் | நலமாக இருக்கிறேன் : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கோவிந்தா | நலமுடன் வீடு திரும்பினார் தர்மேந்திரா | 'கும்கி- 2' படத்திற்கு இடைக்கால தடை போட்ட சென்னை உயர்நீதிமன்றம்! | 'டியூட்' படத்தை அடுத்து ஓடிடிக்கு வரும் 'பைசன்' | ரஜினியின் 'ஜெயிலர்- 2' படத்தில் இணைந்த மேக்னா ராஜ்! | அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‛மை டியர் சிஸ்டர்' | விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ‛ஜெய்பீம்' நடிகை | பாடல் வரிகள், டியூன் தானாக வந்தது, எல்லாம் அவன் செயல் : சத்ய சாய்பாபா பாடல் குறித்து தேவா நெகிழ்ச்சி | ஏ.ஆர் ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் புகைப்படம் : சர்ச்சை கேள்விகளுக்கு சின்மயி பதிலடி |

கேரள சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்த விழாவில் நடிகை பாவனா கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். அதற்கு முன்னதாக அவரை வீரப்பெண்மணி என பலரும் பாராட்டினார்கள். பாவனாவின் பெயரை கூறியதும் அரங்கத்தில் இருந்தோர் எழுந்து நின்று ஒருநிமிடம் வரை கைதட்டல் செய்து தங்களது ஆதரவை அவருக்கு தெரியப்படுத்தினர்.
கடந்த 5 வருடங்களுக்கு முன்பாக நடிகை பாவனாவுக்கு அவரது வாழ்வில் விரும்பத்தகாத நிகழ்வு ஒன்று நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக சட்டத்தின் மூலம் போராடி வருகிறார். அதேசமயம் கடந்த நான்கு வருடங்களில் எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத பாவனா அரசு அழைப்பை ஏற்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அவரது இந்த வருகையை ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர்.