இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நடிகர் கவுதம் கார்த்திக், மஞ்சுமா மோகன் இருவரும் காதலித்து வருவதாக கடந்த சில வாரங்களாகவேசெய்திகள் வைரலாகி வருகிறது. அதோடு மஞ்சிமாவின் பிறந்தநாளுக்கு கவுதம் கூறிய வாழ்த்து செய்தியும் வைரலானது. அதையடுத்து அவர்களின் காதலை பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டதாகவும், விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நேரத்தில் நடிகை மஞ்சிமா மோகன் அளித்துள்ள ஒரு பேட்டியில், கவுதம் கார்த்திக்கின் காதலை நான் ஏற்கவில்லை. என்னுடைய வாழ்க்கையில் நடக்கும் முக்கிய சம்பவங்களை யாரிடத்திலும் நான் மறைத்ததில்லை. சின்ன விஷயமாக இருந்தாலும் அதை வெளிப்படையாகக் கூறி வருகிறேன். அப்படி இருக்கும்போது திருமணம் போன்ற பெரிய நிகழ்வுகளை மறைக்க வேண்டியதில்லை. திருமணம் குறித்த தகவல் வெளியான போது எனக்கு வேதனையை ஏற்படுத்தியது. நான் அதை கண்டுகொள்ளவில்லை. இது போன்ற செய்திகள் வெளியாகி வந்தபோது எனது பெற்றோரின் ரியாக்சன் என்னவாக இருக்குமோ என்று அதிர்ச்சியுடன் இருந்தேன். ஆன போதிலும் அவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.