படப்பிடிப்பிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய ஸ்ருதிஹாசன் | மாயவன் 2-வாக உருவாகும் ‛மாயா ஒன்' : முதல் பார்வை வெளியீடு | சினிமாவிற்கு முழுக்கா... - கங்கனா பதில் | கலகலப்பு மூன்றாம் பாகத்தை இயக்க தயாராகும் சுந்தர்.சி | விமல் நடிப்பில் "போகுமிடம் வெகு தூரமில்லை" | நயன்தாராவின் ‛டியர் ஸ்டூடண்ட்ஸ்' படப்பிடிப்பு துவங்கியது | டில்லி ஹனுமான் கோவிலில் நடக்கும் தக்லைப் படப்பிடிப்பு | ஸ்டார் படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் | ‛ஹவுஸ்புல் 5' - மீண்டும் அபிஷேக் பச்சனை அழைத்து வரும் சஜித் நதியத்வாலா | சீரியலை விட்டு தூக்கிய சோகத்தில் பிரியங்கா நல்காரி - நடந்தது என்ன? |
பிரபாஸ், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்க 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானதாக சொல்லப்பட்ட படம் 'ராதே ஷ்யாம்'. கடந்த வாரம் ஐந்து மொழிகளில் இப்படம் வெளியானது. தெலுங்கில் மட்டும் ஓரளவிற்கு சுமாரான வசூலைப் பெற்ற இந்தப் படம் மற்ற மொழிகளில் எதிர்பாராத விதத்தில் வசூலைப் பெற கடுமையாக தடுமாறி வருகிறது.
சுமார் 200 கோடி ரூபாய் அளவிற்கு இப்படத்தின் வியாபாரம் நடந்துள்ளதாக சொல்லப்பட்டது. முதல் மூன்று நாள் வசூலாக 151 கோடி ரூபாயை வசூலித்ததாக படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால், கடந்த இரண்டு நாட்களாக என்ன வசூல் என்று அறிவிப்பதை அந்நிறுவனம் நிறுத்திவிட்டது.
ஹிந்தியில் கடந்த ஐந்து நாட்களில் மொத்தமாக சுமார் 17 கோடி வரை இந்தப் படம் வசூலித்துள்ளதாக பாலிவுட் தகவல் வெளியாகி உள்ளது. பிரபாஸ் நடித்து கடைசியாக வெளிவந்த 'சாஹோ' படம் ஹிந்தியில் 100 கோடி வசூலித்தது.
200 கோடி ரூபாய் வியாபாரம் நடைபெற்றுள்ள நிலையில் படம் 'ரெக்கவர்' ஆவதற்கு இன்னும் 100 கோடி வரை வசூல் தேவைப்படுகிறதாம். அதற்கு வாய்ப்பில்லை என்றே திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆக்ஷன் எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு வெறும் காதலை மட்டுமே சொன்னதுதான் படத்தின் தோல்விக்குக் காரணம் என்று டோலிவுட்டினர் தெரிவிக்கிறார்கள்.
ஆனால், ஆரம்பம் முதலே இது ஒரு காதல் படம் என்றுதான் சொல்லி வந்தோம். அதில் வந்து ஆக்ஷன் எங்கே என்று விமர்சித்தால் என்ன சொல்வது, என இயக்குனர் ஆவேசப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.