பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா | 'குபேரா' படத்திற்கு அழுத்தம் கொடுத்த ஓடிடி நிறுவனம் | ராஜமவுலி, மகேஷ்பாபு பட வாய்ப்பைத் தவிர்த்த விக்ரம்? | சாந்தனு ஜோடியாக அஞ்சலி நாயர் | 'திருக்குறள்' படம் உருவானது எப்படி?: இயக்குனர் விளக்கம் | அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு | இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா |
பிரபாஸ், பூஜா ஹெக்டே, சத்யராஜ் மற்றும் பலர் நடிக்க ராதாகிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான 'ராதேஷ்யாம்' படம் நேற்று முன்தினம் ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் வெளியானது.
பிரபாஸ் ரசிகர்கள் ஒரு பிரம்மாண்ட ஆக்ஷன் படத்தை எதிர்பார்க்க, படமோ ஒரு முழுநீள காதல் காவியமாக இருந்தது. பல தெலுங்கு ஊடகங்கள் இந்தப் படத்தை கடுமையாகவே விமர்சனம் செய்து எழுதியிருந்தனர். மெதுவாக நகர்கிறது, வெறும் காதல் மட்டுமே உள்ளது என்றெல்லாம் விமர்சித்திருந்தார்கள். படத்தின் வசூலும் எதிர்பார்த்த அளவு இல்லையென்று செய்திகள் வெளிவந்தன.
இந்நிலையில் நேற்று படத் தயாரிப்பு நிறுவனம் படத்தின் முதல் நாள் வசூல் 79 கோடி என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. வசூல் பற்றி வந்த செய்திகளுக்கு தயாரிப்பு நிறுவனம் பதிலடி கொடுக்க, விமர்சனங்களுக்கான பதிலடியாக படத்தின் இயக்குனர் ராதாகிருஷ்ணகுமார் பதிவிட்டுள்ளார். “பிரம்மாண்டமான வரவேற்புக்கு அனைவருக்கும் நன்றி. நாங்கள் அன்புடன் இந்தப் படத்தை எடுத்தோம், நீங்கள் பதிலுக்கு அன்பைப் பொழிகிறீர்கள். விமர்சனங்கள் தேவை அல்ல, ரிசல்ட்தான் மேட்டர், பிளாக்பஸ்டர் ராதேஷ்யாம்” என்று அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.