மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பிரபாஸ், பூஜா ஹெக்டே, சத்யராஜ் மற்றும் பலர் நடிக்க ராதாகிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான 'ராதேஷ்யாம்' படம் நேற்று முன்தினம் ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் வெளியானது.
பிரபாஸ் ரசிகர்கள் ஒரு பிரம்மாண்ட ஆக்ஷன் படத்தை எதிர்பார்க்க, படமோ ஒரு முழுநீள காதல் காவியமாக இருந்தது. பல தெலுங்கு ஊடகங்கள் இந்தப் படத்தை கடுமையாகவே விமர்சனம் செய்து எழுதியிருந்தனர். மெதுவாக நகர்கிறது, வெறும் காதல் மட்டுமே உள்ளது என்றெல்லாம் விமர்சித்திருந்தார்கள். படத்தின் வசூலும் எதிர்பார்த்த அளவு இல்லையென்று செய்திகள் வெளிவந்தன.
இந்நிலையில் நேற்று படத் தயாரிப்பு நிறுவனம் படத்தின் முதல் நாள் வசூல் 79 கோடி என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. வசூல் பற்றி வந்த செய்திகளுக்கு தயாரிப்பு நிறுவனம் பதிலடி கொடுக்க, விமர்சனங்களுக்கான பதிலடியாக படத்தின் இயக்குனர் ராதாகிருஷ்ணகுமார் பதிவிட்டுள்ளார். “பிரம்மாண்டமான வரவேற்புக்கு அனைவருக்கும் நன்றி. நாங்கள் அன்புடன் இந்தப் படத்தை எடுத்தோம், நீங்கள் பதிலுக்கு அன்பைப் பொழிகிறீர்கள். விமர்சனங்கள் தேவை அல்ல, ரிசல்ட்தான் மேட்டர், பிளாக்பஸ்டர் ராதேஷ்யாம்” என்று அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.