எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
பிரபாஸ், பூஜா ஹெக்டே, சத்யராஜ் மற்றும் பலர் நடிக்க ராதாகிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான 'ராதேஷ்யாம்' படம் நேற்று முன்தினம் ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் வெளியானது.
பிரபாஸ் ரசிகர்கள் ஒரு பிரம்மாண்ட ஆக்ஷன் படத்தை எதிர்பார்க்க, படமோ ஒரு முழுநீள காதல் காவியமாக இருந்தது. பல தெலுங்கு ஊடகங்கள் இந்தப் படத்தை கடுமையாகவே விமர்சனம் செய்து எழுதியிருந்தனர். மெதுவாக நகர்கிறது, வெறும் காதல் மட்டுமே உள்ளது என்றெல்லாம் விமர்சித்திருந்தார்கள். படத்தின் வசூலும் எதிர்பார்த்த அளவு இல்லையென்று செய்திகள் வெளிவந்தன.
இந்நிலையில் நேற்று படத் தயாரிப்பு நிறுவனம் படத்தின் முதல் நாள் வசூல் 79 கோடி என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. வசூல் பற்றி வந்த செய்திகளுக்கு தயாரிப்பு நிறுவனம் பதிலடி கொடுக்க, விமர்சனங்களுக்கான பதிலடியாக படத்தின் இயக்குனர் ராதாகிருஷ்ணகுமார் பதிவிட்டுள்ளார். “பிரம்மாண்டமான வரவேற்புக்கு அனைவருக்கும் நன்றி. நாங்கள் அன்புடன் இந்தப் படத்தை எடுத்தோம், நீங்கள் பதிலுக்கு அன்பைப் பொழிகிறீர்கள். விமர்சனங்கள் தேவை அல்ல, ரிசல்ட்தான் மேட்டர், பிளாக்பஸ்டர் ராதேஷ்யாம்” என்று அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.