வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா | மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் |
தமிழ், ஹிந்தி, பிரெஞ்ச், ஹாலிவுட் என ரவுண்டடிக்கும் தனுஷ் தற்போது 'வாத்தி' என்ற தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வரும் படத்தில் நடித்து வருகிறார். அதற்காக கடந்த சில மாதங்களாகவே ஐதராபாத்திலேயே தங்கி இருந்தார்.
தற்போதுதான் மீண்டும் சென்னை வந்துள்ளார் போலிருக்கிறது. அவர் வளர்க்கும் நாய்களான கிங், காங், ஜெங்கிஸ், கேசர் ஆகியவற்றுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து “நீண்ட நாளுக்குப் பிறகு ரியூனியன்.. எனது பாய்ஸ்களுடன் இருப்பது மிக்க மகிழ்ச்சி,” எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும், தனுஷ் புதிய தோற்றத்தில் காணப்படுகிறார். கடைசியாக இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது மகனுடன் பதிவிட்ட புகைப்படத்தில் கூட அவர் முகத்தை சரியாகக் காட்டவில்லை. இப்போது சற்றே வளர்ந்த முடியுடன், தாடி, மீசை இல்லாமல் பள்ளி மாணவன் போல இருக்கிறார்.
தனுஷ் இப்படி ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்திருக்க, ஐஸ்வர்யா தனுஷ் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன் என டாக்டருடன் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
இரண்டு பதிவுகளிலும் தனுஷின் அண்ணியும், செல்வராகவனின் மனைவியுமான கீதாஞ்சலி செல்வராகவன் கமெண்ட் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.