ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
தமிழ், ஹிந்தி, பிரெஞ்ச், ஹாலிவுட் என ரவுண்டடிக்கும் தனுஷ் தற்போது 'வாத்தி' என்ற தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வரும் படத்தில் நடித்து வருகிறார். அதற்காக கடந்த சில மாதங்களாகவே ஐதராபாத்திலேயே தங்கி இருந்தார்.
தற்போதுதான் மீண்டும் சென்னை வந்துள்ளார் போலிருக்கிறது. அவர் வளர்க்கும் நாய்களான கிங், காங், ஜெங்கிஸ், கேசர் ஆகியவற்றுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து “நீண்ட நாளுக்குப் பிறகு ரியூனியன்.. எனது பாய்ஸ்களுடன் இருப்பது மிக்க மகிழ்ச்சி,” எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும், தனுஷ் புதிய தோற்றத்தில் காணப்படுகிறார். கடைசியாக இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது மகனுடன் பதிவிட்ட புகைப்படத்தில் கூட அவர் முகத்தை சரியாகக் காட்டவில்லை. இப்போது சற்றே வளர்ந்த முடியுடன், தாடி, மீசை இல்லாமல் பள்ளி மாணவன் போல இருக்கிறார்.
தனுஷ் இப்படி ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்திருக்க, ஐஸ்வர்யா தனுஷ் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன் என டாக்டருடன் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
இரண்டு பதிவுகளிலும் தனுஷின் அண்ணியும், செல்வராகவனின் மனைவியுமான கீதாஞ்சலி செல்வராகவன் கமெண்ட் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.