காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

தெலுங்கு திரையுலகில் மோஸ்ட் எலிஜிபில் பேச்சிலர் ஆக வலம் வருபவர் நடிகர் பிரபாஸ். 40 வயதை தாண்டிய அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் காலம் கடத்தி வருகிறார். இன்னொரு பக்கம் இவருக்கும் அனுஷ்காவுக்கும் இடையே காதல் இருக்கிறது, அவரைத்தான் திருமணம் செய்ய போகிறார் என்று கூட அவ்வப்போது செய்திகள் பரபரப்பாக கிளம்பி அப்படியே அமுங்கி விடும்.
இந்த நிலையில் பிரபாஸ் நடிப்பில் அடுத்த வாரம் ராதே ஷ்யாம் என்கிற படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் கைரேகை ஜோசியத்தில் கை தேர்ந்தவராக நடித்துள்ளார் பிரபாஸ்.
மும்பையில் நடைபெற்ற இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது நிருபர் ஒருவர் அவரிடம் படத்தில் எல்லோருக்கும் கல்யாண விஷயம் குறித்து கை ரேகை பார்த்து சொல்கின்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறீர்கள், அந்த வகையில் உங்களது திருமணம் எப்போது என்று உங்களால் கூற முடியுமா என்று கேட்டார். அதற்கு பதிலளித்த பிரபாஸ் காதல் விசயத்தில் எப்போதுமே என்னுடைய கணிப்புகள் தவறாகவே போயிருக்கின்றன. அதனால்தான் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று கலாட்டாவாக பதில் கூற அங்கிருந்த நிருபர்கள் அனைவரும் சிரித்தனர்.




