சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
தெலுங்கு திரையுலகில் மோஸ்ட் எலிஜிபில் பேச்சிலர் ஆக வலம் வருபவர் நடிகர் பிரபாஸ். 40 வயதை தாண்டிய அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் காலம் கடத்தி வருகிறார். இன்னொரு பக்கம் இவருக்கும் அனுஷ்காவுக்கும் இடையே காதல் இருக்கிறது, அவரைத்தான் திருமணம் செய்ய போகிறார் என்று கூட அவ்வப்போது செய்திகள் பரபரப்பாக கிளம்பி அப்படியே அமுங்கி விடும்.
இந்த நிலையில் பிரபாஸ் நடிப்பில் அடுத்த வாரம் ராதே ஷ்யாம் என்கிற படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் கைரேகை ஜோசியத்தில் கை தேர்ந்தவராக நடித்துள்ளார் பிரபாஸ்.
மும்பையில் நடைபெற்ற இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது நிருபர் ஒருவர் அவரிடம் படத்தில் எல்லோருக்கும் கல்யாண விஷயம் குறித்து கை ரேகை பார்த்து சொல்கின்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறீர்கள், அந்த வகையில் உங்களது திருமணம் எப்போது என்று உங்களால் கூற முடியுமா என்று கேட்டார். அதற்கு பதிலளித்த பிரபாஸ் காதல் விசயத்தில் எப்போதுமே என்னுடைய கணிப்புகள் தவறாகவே போயிருக்கின்றன. அதனால்தான் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று கலாட்டாவாக பதில் கூற அங்கிருந்த நிருபர்கள் அனைவரும் சிரித்தனர்.