பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சம்மன் | உஸ்தாத் பகத்சிங் படத்தில் இணைந்த ராஷி கண்ணா | தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ‛இட்லி கடை' முதல் பாடல் | மீண்டும் படம் தயாரித்து, நடிக்கப்போகும் சமந்தா | பெத்தி படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய ராம் சரண் | விஜய்க்கு அரசியல் கட்சி துவங்க தைரியம் வந்ததே இப்படித்தான் : பார்த்திபன் வெளியிட்ட தகவல் | 10 ஆண்டுகளாக சத்தமே இல்லாமல் சூர்யா செய்து வரும் உதவி | அரசியலில் விஜய் ஜெயிப்பது ரொம்ப கஷ்டம் : ரஜினி அண்ணன் சத்ய நாராயணா | அரசியலில் நான் 'பேமஸ்'; சினிமாவில் நான் 'ஆவரேஜ்': பவன் கல்யாண் ஓபன் டாக் | ஸ்கூல் ரியூனியன் : 50 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களை சந்தித்த நாசர் |
பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் அடுத்தபடியாக தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார். தமிழ். தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது. தமன் இசையமைக்கும் இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். விஜய்யின் 66 ஆவது படத்தில் பிரபாஸ் நடிப்பில் தெலுங்கு, ஹிந்தியில் தயாராகி வரும் ஆதிபுருஷ் என்ற ராமாயண இதிகாச படத்திற்கு ஒளிப்பதிவு செய்யும் கார்த்திக் பழனி என்பவர் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கீர்த்தி சுரேஷ் நடித்த பென்குயின் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த இவர், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார்.