பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! | தனுசை ஆச்சரியப்பட வைத்த இயக்குனர் விக்னேஷ் ராஜா! | 96 பட இயக்குனரிடம் கதை கேட்ட நானி | லிங்குசாமி, சரண் புதிய படத்திற்காக கூட்டணி | இதெல்லாம் டிசம்பர் மாதம் ரிலீஸ் : ரிசல்ட் எப்படி இருக்குமோ? | சின்மயி மன்னிப்பு : இயக்குனர் பேரரசு பதிலடி |

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் வெங்கட் நடித்து வருகிறார். இந்த தொடரில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தார் திறக்கவிருந்த புதிய மளிகை கடையை திறக்கவிடாமல் சிலர் சதி செய்கின்றனர். பல போராட்டங்களுக்கு மத்தியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரதர்ஸ் கடையை மீட்டு திறக்கின்றனர். இந்த சந்தோஷமான நிகழ்வை கொண்டாடும் விதத்தில் ஜீவா என்ற கதாபாத்திரம் மது அருந்துவதோடு, வீட்டில் சென்று ரகளை செய்கிறது. இந்த எபிசோடு செம காமெடியாக சென்றதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததுடன் அதில் நடித்த வெங்கட்டையும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், அந்த அளவுக்கு எதார்த்தமாக நடித்த வெங்கட்டை நீங்கள் உண்மையாகவே குடிச்சீங்களா? என பலரும் கேள்வி கேட்டு வந்தனர். அவர்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் அந்த காட்சி உருவாக்கப்பட்ட விதத்தை வீடியோவாக வெங்கட் வெளியிட்டுள்ளார். மேலும் அதில், நான் ஒரு டீ டோட்டலர். சைட் டிஸ் மட்டுமே சாப்பிடுவேன். அந்த காட்சிக்காக கண்களை தேய்த்து தேய்த்து நடித்தேன். இதனால் கண் வலி வந்தது. ஆனாலும், அது வொர்த் தான் என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் அனைவரும் வெங்கட்டின் நடிப்பை புகழ்ந்து பாராட்டி வருகின்றனர்.




