படப்பிடிப்பிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய ஸ்ருதிஹாசன் | மாயவன் 2-வாக உருவாகும் ‛மாயா ஒன்' : முதல் பார்வை வெளியீடு | சினிமாவிற்கு முழுக்கா... - கங்கனா பதில் | கலகலப்பு மூன்றாம் பாகத்தை இயக்க தயாராகும் சுந்தர்.சி | விமல் நடிப்பில் "போகுமிடம் வெகு தூரமில்லை" | நயன்தாராவின் ‛டியர் ஸ்டூடண்ட்ஸ்' படப்பிடிப்பு துவங்கியது | டில்லி ஹனுமான் கோவிலில் நடக்கும் தக்லைப் படப்பிடிப்பு | ஸ்டார் படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் | ‛ஹவுஸ்புல் 5' - மீண்டும் அபிஷேக் பச்சனை அழைத்து வரும் சஜித் நதியத்வாலா | சீரியலை விட்டு தூக்கிய சோகத்தில் பிரியங்கா நல்காரி - நடந்தது என்ன? |
இயக்குனர் அமீர், இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா கூட்டணி தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு கூட்டணி. 'மௌனம் பேசியதே, ராம், பருத்தி வீரன், ஆதி பகவன்' ஆகிய படங்களில் இணைந்தவர்கள் சுமார் 9 வருட இடைவெளிக்குப் பிறகு 'இறைவன் மிகப் பெரியவன்' படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளார்கள்.
இப்படத்தின் அறிமுக விழா கடந்த வாரம்தான் நடைபெற்றது. இந்தக் கூட்டணி மீது இருவரது ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்பை வைத்துள்ளார்கள். உடனடியாக படத்தின் பாடல் பதிவு வேலைகளையும் ஆரம்பித்துவிட்டார்கள்.
இது குறித்து யுவன் கூறுகையில், “22..02.2022 என்ற சிறப்பு நாளில் 'இறைவன் மிகப் பெரியவன்' படத்திற்கான பாடல் பதிவு நடந்தது” என தெரிவித்துள்ளார். யுவன் இசையமைத்துள்ள 'வலிமை' படம் நாளை மறுதினம் (பிப்., 24) வெளிவர உள்ள நிலையில் யுவனின் எதிர்பார்ப்புக்குரிய இந்த புதிய படத்தின் அப்டேட் யுவன் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.