நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் |

மலையாளத்தில் வரவேற்பை பெற்ற ‛ஜோசப்' படம் தமிழில் ‛விசித்திரன்' என்ற பெயரில் ரீ-மேக் ஆகி உள்ளது. ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடித்து தயாரித்துள்ளார். மலையாளத்தில் இயக்கிய பத்மகுமாரே தமிழிலும் இயக்கி உள்ளார். இயக்குனர் பாலா தனது பி ஸ்டுடியோஸ் சார்பில் இந்த படத்தை வெளியிடுகிறார்.
இப்பட விழாவில் பேசிய இயக்குனர் பாலா, ‛‛மலையாளத்தை காட்டிலும் இந்த படம் நன்றாக வந்துள்ளது. ஆர்.கே.சுரேஷிற்கு நல்லதொரு படம். இதை வைத்து அடுத்தடுத்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடி. இனி ஏனோ தானோ என படங்களை தேர்வு செய்யாதே பெயரை கெடுத்து கொள்ளாதே, உன் மரியாதையை காப்பாத்திக்கோ'' என அட்வைஸ் செய்தார்.