10 நாட்களில் ரூ.25 கோடி வசூலைக் கடந்த ‛வித் லவ்' | மரகதநாணயம் 2 படம் தொடங்கியது | கில்லி மீண்டும் ரீ ரிலீஸ் ஆகிறது : மங்கத்தா சாதனையை முறியடிக்குமா? | இனி காமெடி படம் மட்டுமே...? இயக்குனர் பொன்ராம் முடிவு | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' | பூவே உனக்காக படம் பிரசாந்த் நடிக்க வேண்டியதா? | இயக்குனர் விஜய்க்கு மறுவாழ்வு தருமா 'காதல்' | இப்ப வருமோ…எப்ப வருமோ….'ஜனநாயகன்' | இயக்குனர்கள் அடிமையாக இருக்கக் கூடாது : புது நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் ஆர்கே செல்வமணி பேச்சு | பா.ஜ., தலைவரின் பேச்சுக்கு திரிஷா கண்டனம் : வருத்தம் தெரிவித்த நயினார் நாகேந்திரன் |

தெலுங்குத் திரையுலகின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டாவும், இளம் நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனாவும் காதலிப்பதாகவும், அவர்களுக்கு இந்த வருடத்திற்குள் திருமணம் என்றும் பல பாலிவுட் மீடியாக்கள் செய்திகளை வெளியிட்டு வந்தன.
இருவருமே ஹிந்திப் படங்களில் அறிமுகமாவதன் மூலம் பாலிவுட்டில் கால்பதித்துள்ளனர். விரைவில் அவர்களது நேரடி ஹிந்திப் படங்கள் வெளியாக உள்ளது. இதனால், பொறாமை அடைந்து யாராவது அவர்களைப் பற்றிய வதந்திகளைக் கிளப்பி விட்டுள்ளதாகவே தெலுங்குத் திரையுலகில் சொல்கிறார்கள். கடந்த சில நாட்களாக பல மீடியாக்களில் விஜய், ராஷ்மிகாவின் காதல் பற்றிய செய்தி வெளியானது. அவற்றை விஜய்யும் படித்திருப்பார் போலிருக்கிறது.
நேற்று சமூகவலைதளத்தில் 'வழக்கம் போல நான்சென்ஸ்' என்று ஒரு பதிவிட்டுள்ளார் விஜய். எதைப் பற்றி அவர் இப்படி பதிவிட்டுள்ளார் என்று அவர் தெரிவிக்கவில்லை என்றாலும் படிப்பவர்களுக்குத் தெரியாதா ?.




