வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் | ‛ஏஸ்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது! |
தமிழில் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ், தெலுங்கில் ஏக் மினி கதா, ஏக் மாயா பிரேமித்தோ, இந்தியில் தட்கல் படங்களில் நடித்தவர் காவ்யா தாபர். காவ்யா நேற்று முன்தினம் இரவு மும்பை ஜூகு பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த மது விருந்து ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு காரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.. அப்போது, அவரது கார் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதைப்பார்த்த அந்த பகுதியை மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்து நடிகை காவ்யா தாபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. போலீசின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததுடன் விசாரணை நடத்திய பெண் போலீசின் சட்டையை பிடித்து இழுத்து தாக்க முயற்சித்துள்ளார். இதை தொடர்ந்து போலீசார் காவ்யா தாபரை கைது செய்தனர்.
குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது, பணியில் இருந்த போலீசாரை கடமையை செய்ய விடாமல் தடுத்து, தாக்க முற்பட்டது என பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.