பிளாஷ்பேக்: “தீபாவளி” நாளன்று திரையில் தேசப்பற்றை விதைத்த “கப்பலோட்டிய தமிழன்” | அம்மாவுக்கும் மகளுக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடிய மகிழ்ச்சியில் காவ்யா மாதவன் | பஹத் பாசிலின் கண்களில் தெரியும் வெறித்தனம் ; சிலாகிக்கும் ராஜமவுலியின் மகன் | தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் | அமிதாப் பச்சனின் தீபாவளி கொண்டாட்டத்தில் மகளுடன் ஆப்சென்ட் ஆன ஐஸ்வர்யா ராய் | ‛பேட்டில் ஆப் கல்வான்' படப்பிடிப்பில் சல்மான்கானுக்கு மொபைல் போன் அனுமதி மறுப்பு | இது ‛டியூட்' தீபாவளி: மத்தாப்பாய் மமிதா பைஜூ | 'என்ன சொல்ல போகிறார்(ய்)' தேஜூ அஸ்வினி | சேலை விற்றேன், மாடலிங் செய்தேன் : 'முல்லை' லாவண்யா | வாடும் மனசை பாட்டால் வருடி வலி போக்கும் மதுஐயர் |
விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி முடித்துவிட்ட நெல்சன் திலீப்குமார் அடுத்தததாக ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 169வது படத்தை இயக்குகிறார் என்கிற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. யோகிபாபு, சிவகார்த்திகேயன், விஜய், அடுத்தததாக ரஜினி என குறுகியகாலத்தில் படிப்படியாக முன்னேறி, நான்காவது படத்திலேயே தமிழ் சினிமா இயக்குனரின் உச்ச பட்ச இலக்கை தொட்டுவிட்டார் இயக்குனர் நெல்சன் திலீப்குமார்.
இந்தப்படத்தில் அனிருத் தவிர மற்ற நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம் இன்னும் முடிவாகவில்லை. அதேசமயம் பீஸ்ட் படத்தில் நெல்சனுடன் பணியாற்றியுள்ள மனோஜ் பரமஹம்சாவே இந்தப்படத்திலும் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார் என்கிற தகவல் கசிந்துள்ளது. கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களில் வெவ்வேறு ஒளிப்பதிவாளர்களுடன் பணியாற்றிய நெல்சனுக்கு பீஸ்ட் படப்பிடிப்பில் மனோஜ் பரமஹம்சாவுடன் அலைவரிசை ஒத்துப்போனது தான் இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.