பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி முடித்துவிட்ட நெல்சன் திலீப்குமார் அடுத்தததாக ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 169வது படத்தை இயக்குகிறார் என்கிற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. யோகிபாபு, சிவகார்த்திகேயன், விஜய், அடுத்தததாக ரஜினி என குறுகியகாலத்தில் படிப்படியாக முன்னேறி, நான்காவது படத்திலேயே தமிழ் சினிமா இயக்குனரின் உச்ச பட்ச இலக்கை தொட்டுவிட்டார் இயக்குனர் நெல்சன் திலீப்குமார்.
இந்தப்படத்தில் அனிருத் தவிர மற்ற நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம் இன்னும் முடிவாகவில்லை. அதேசமயம் பீஸ்ட் படத்தில் நெல்சனுடன் பணியாற்றியுள்ள மனோஜ் பரமஹம்சாவே இந்தப்படத்திலும் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார் என்கிற தகவல் கசிந்துள்ளது. கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களில் வெவ்வேறு ஒளிப்பதிவாளர்களுடன் பணியாற்றிய நெல்சனுக்கு பீஸ்ட் படப்பிடிப்பில் மனோஜ் பரமஹம்சாவுடன் அலைவரிசை ஒத்துப்போனது தான் இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.