சிவகார்த்திகேயனுடன் பேசுவதைத் தவிர்த்தாரா விஜய் ? | லோகா வாய்ப்பை மறுத்தீர்களா ? கேள்வியால் டென்ஷனான பார்வதி | பிளாஷ்பேக்: கலைஞர்கள் பேசாமல், பார்வையாளர்கள் பேசிய மவுனத் திரைப்படம் “பேசும்படம்” | 15 ஆண்டுகளுக்குபின் மங்கத்தா ரீ ரிலீஸ் : அஜித் ரசிகர்கள் போடும் திட்டம் | சென்சார் சான்றிதழ் வரலையா : டென்ஷனில் பராசக்தி, ஜனநாயகன் குழு | ஓமனில் டிரக்கிங் சென்ற பாடகி சித்ரா ஐயரின் சகோதரி உயிரிழப்பு | பாலா தயாரிப்பில் படம் இயக்கப் போகும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்? | இயக்குனர் பாரதிராஜா உடல்நிலை எப்படி இருக்கிறது : இயக்குனர் ஆர்.கே.செல்வமணி தகவல் | இந்திய பாக்ஸ் ஆபீஸ் 2025 : எத்தனை கோடி வசூல் தெரியுமா ? | அதிக சதவீதம் கேட்கும் 'ஜனநாயகன்' ; தயங்கும் தியேட்டர் உரிமையாளர்கள் : பிரச்னை தீருமா? |

விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி முடித்துவிட்ட நெல்சன் திலீப்குமார் அடுத்தததாக ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 169வது படத்தை இயக்குகிறார் என்கிற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. யோகிபாபு, சிவகார்த்திகேயன், விஜய், அடுத்தததாக ரஜினி என குறுகியகாலத்தில் படிப்படியாக முன்னேறி, நான்காவது படத்திலேயே தமிழ் சினிமா இயக்குனரின் உச்ச பட்ச இலக்கை தொட்டுவிட்டார் இயக்குனர் நெல்சன் திலீப்குமார்.
இந்தப்படத்தில் அனிருத் தவிர மற்ற நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம் இன்னும் முடிவாகவில்லை. அதேசமயம் பீஸ்ட் படத்தில் நெல்சனுடன் பணியாற்றியுள்ள மனோஜ் பரமஹம்சாவே இந்தப்படத்திலும் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார் என்கிற தகவல் கசிந்துள்ளது. கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களில் வெவ்வேறு ஒளிப்பதிவாளர்களுடன் பணியாற்றிய நெல்சனுக்கு பீஸ்ட் படப்பிடிப்பில் மனோஜ் பரமஹம்சாவுடன் அலைவரிசை ஒத்துப்போனது தான் இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.




