ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் சிவகார்த்திகேயனின் 20வது படத்தின் படப்பிடிப்பு இரு தினங்களுக்கு முன்பு காரைக்குடியில் ஆரம்பமானது. தெலுங்கில் 'ஜதி ரத்னலு' படத்தை இயக்கிய அனுதீப் இப்படத்தை இயக்கி வருகிறார்.
இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியான போதே லண்டன், புதுச்சேரி ஆகிய இடங்களை மோஷன் போஸ்டரில் காட்டியிருந்தார்கள். இரண்டு இடங்களையும் கதைக்களமாகக் கொண்ட படத்தில் இரண்டு நாயகிகள் நடிக்கப் போவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதில் வெளிநாட்டு கதாநாயகி ஒருவர் தேவையாம். ராஜமவுலி இயக்கியுள்ள 'ஆர்ஆர்ஆர்' படத்தில் நடித்துள்ள ஒலிவியா மோரிஸ் அந்த வெளிநாட்டு கதாநாயகி கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்கிறார்கள்.
மற்றொரு கதாநாயகியாக நடிக்க உள்ள நடிகை யார் என்பது குறித்தும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். விரைவில் படத்தின் கதாநாயகிகள் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகலாம்.