2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

தனுஷ் -- ஐஸ்வர்யா இடையே மீண்டும் ஒற்றுமையை ஏற்படுத்த, நடிகர் ரஜினி தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்குமான, 18 ஆண்டு கால திருமண உறவு திடீரென விரிசலை சந்தித்தது. இருவருக்கும் யாத்ரா, லிங்கா என, இரண்டு மகன்கள் உள்ள நிலையில், இருவரும் பிரிவதாக ஒன்றாக அறிவித்தனர். இது, ரஜினி உள்ளிட்ட குடும்பத்தினர் மட்டுமின்றி, ரசிகர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
'இருவரும் தற்காலிகமாக பிரிந்துள்ளனர். இன்னும் விவாகரத்து பெறவில்லை. அதனால், இருவரும் சேர வாய்ப்புள்ளது' என, தகவல் வெளியான நிலையில், தனுஷையும், ஐஸ்வர்யாவையும் சமாதானப்படுத்தும் நடவடிக்கையில், ரஜினி இறங்கினார். முதலில் ஐஸ்வர்யாவிடம் பேசிய ரஜினி, 'உன் பிள்ளைகள் எதிர்காலத்தை விட, உன் விருப்பம் முக்கியமாகி விட்டதா?' என காட்டமாக கேட்டுள்ளார். ரஜினியின் கடுமையான கண்டிப்புக்கும் அறிவுரைக்கும் பின், சில நிபந்தனைகளுடன் தனுஷுடன் சேர்ந்து வாழ முன்வந்தார் ஐஸ்வர்யா. ஆனால், தனுஷ் தரப்பில் இருந்து இன்னும் சாதகமான பதில் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால், தனுஷ் தந்தை கஸ்துாரிராஜாவிடமும், தனுஷிடமும் பேசி, சமாதான நடவடிக்கைகளை, ரஜினி தொடர்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷும் ஐஸ்வர்யாவும் பிரியாமல் தடுக்க, பேரன்கள் வாயிலாகவும் இருவரையும் சந்திக்க ஏற்பாடு செய்துள்ளார் ரஜினி. பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்ற பயம் காரணமாக, மகளையும், மருமகனையும் சமாதானப்படுத்த, தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார் ரஜினி. அதற்கு விரைவில் பலன் கிடைக்கும் என்கிறது, அவரது குடும்ப வட்டாரம்.